மிகுந்த வேதனை அடைந்தேன்.. திருப்பூர் விபத்துக்கு முதல்வர் விஜய் இரங்கல்.. ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!

cm vijay new

திருப்பூர் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த 5 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்..


தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் ” திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கரூர்-கோயம்புத்தூர் தேசிய நெஞ்சாலையில், குறுக்கத்தி செக்போஸ்ட் அருகில், வேகமாக வந்த லாரி சாலைத் தடுப்பில் போதிய நிலையில் அதைச் சரிசெய்து கொண்டிருந்த கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் திரு.ரா.செந்தில் (வயது 48) த/பெ.ராஜாமணி மீது அவ்வழியே வேகமாக வந்த Xylo நான்கு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், அவரும், Xylo வாகன ஒட்டுநர் திரு.ராம் (வயது 23, த/பெரத்தினம், மயிலாடுதுறையைச் சேர்ந்த திரு.நரசிம்மன் (வயது 65), அவரது மனைவி திருமதி.சாந்தாலட்சுமி (வயது 60) மற்றும் அவரது மகன் திரு.ந.பாலாஜி (வயது 29) ஆகிய ஐந்து நபர்களும் சம்பவ் இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களையும் இழந்து வாடும் குடும்பத்தினருக்கும். அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு தலா 3 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

RUPA

Next Post

நிலக்கரி வாயுவாக்கத்தை ஊக்குவிக்க ரூ. 37,500 கோடி ஊக்கத்தொகைத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்; நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ. 72 ஆக உயர்வு..!

Wed May 13 , 2026
தூய்மையான ஆற்றலை நோக்கிய ஒரு முயற்சியாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இயங்கும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA), ரூ. 37,500 கோடி மதிப்பிலான நிலக்கரி வாயுவாக்கல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் மோதலால் ஏற்பட்டுள்ள நிலையற்ற புவிசார் அரசியல் சூழலுக்கு மத்தியில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தவும், அதிக அந்நியச் செலாவணியை விழுங்கும் இறக்குமதிகளின் மீதான சார்பைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை உதவும். […]
coal

You May Like