சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரையாற்றினார்.. அப்போது முதல்வர் விஜய் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. டாஸ்மாக்கில் கட்சி நிதி என முதல்வர் பேசியதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.. ஆதாரம் இல்லாமல், பேரவையில் அவதூறாக பேசியதாக திமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்..
சட்டப்பேரவையில் ஒரே நேரத்தில் எதிர்க்கட்சியினர் ஆளுக்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று முழக்கமிட்டனர்.. அப்போது சபாநாயகர்’ முதல்வர் விஜய் பேசி முடித்த பின்னர் எதிர்க்கட்சியினர் பேச அனுமதி தருகிறேன்.. எதிர்க்கட்சி தலைவருக்கு பேச வாய்ப்பு தருகிறேன்..” என்று தெரிவித்தார்..
ஒருகட்டத்தில் முதல்வர் விஜய் மீண்டும் பேச தொடங்கினார்.. கடும் எதிர்ப்புக்கு பின்னர் முதல்வர் விஜய் மீண்டும் பேசத் தொடங்கினார்.. அப்போது “ டாஸ்மாக் மட்டுமல்லாமல் பல துறைகளில் கட்சி நிதி வசூலிக்கப்பட்டது.. அரசு பணத்தை தொட மாட்டோம், தொடவும் விடமாட்டோம் ஏற்கனவே தொட்டவர்களை விடமாட்டோம்.. மக்கள் பணத்தை தொட்டவர்கள் யாராக இருந்தாலும் விட மாட்டோம்.. திமுக தயவால் தான் இந்த ஆட்சி நடக்கிறது என்று புதிய ஆயுதத்தை எடுத்துள்ளனர்..
மக்கள் தயவால் தான் இந்த ஆட்சி நடக்கிறது. மனசாட்சி உள்ள சக்திகளாக் தான் இந்த ஆட்சி நடக்கிறது.. நீங்கள் அனுப்பி வைத்தவர்கள் என்றால், அமைச்சர் பதவி தந்தால் ஏன் கதறுகிறீர்கள்..? மா. கம்யூனிஸ்ட் நமக்கு தந்தது சுயேட்சையாக எடுத்த முடிவு என சொல்கின்றனர்..
ஊழலில் ஊறி போனவர்களால் ஆட்சியில் பங்கு என்பது அளிக்க முடியாது.. முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சோஃபா மாடல் அரசு விமர்சிக்கின்றனர்.. அது என்னவென்று புரியவே என பல நாட்கள் ஆனது.. சோஃபா, ஃபர்னிச்சர் பிஸ்னஸ் எல்லாம் வெளியே செய்ய சொல்லுங்க.. சட்டப்பேரவையில் வேண்டாம்.. எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைத்தால் அதை ஏற்றுக் கொள்ள தயார்..” என்று தெரிவித்தார்..
தமிழ்நாட்டில் தற்போது மிக மிக சாமானியர்களின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.. காசு கொடுத்து ஓட்டு வாங்கும் நச்சு கலாச்சாரத்தை ஒழித்துள்ளோம்.. கண்ணை மூடி கொண்டு மத்திய அரசை எதிர்ப்பது தவெகவின் கொள்கை அல்ல. தமிழ், தமிழ்
நேற்று எதிர்க்கட்சி தலைவர் பேசும் நமது அரசை evils என்று சொன்னார்.. ஆனால் Evils, Evils என்று Devils பேசக் கூடாது.. (அதாவது தீயவர்கள் தீமையை பற்றி பேசக்கூடாது..) எதிர்க்கட்சியினர் இருந்திருந்தால் ஒரு ஆக்ஷன் பண்ண வேண்டும் என்று எனக்கு தோன்றியது.. எல்லோரும் போய்விட்டார்கள் பண்ணலாமா என்று சபாநாயகரிடம் அனுமதி கேட்டார்.. சபாநாயகர் அனுமதி அளித்த உடன் விஜய் அந்த சைகையை செய்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஆனால் விஜய் இந்த ஆக்ஷனை செய்யும் போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினோ அல்லது திமுக உறுப்பினர்களோ யாரும் அங்கும் இல்லை.. எதிர்க்கட்சியே இல்லாமல் யாரை பார்த்து முதல்வர் விஜய் இந்த ஆக்ஷனை செய்கிறார் என்றும் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்..



