ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
இந்த சூழலில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,04,240 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகைப்பிரியர்கள் நிம்மதி அடைந்தனார்.. ஆனால் இந்த மகிழ்ச்சி ஒரு நாள் கூட நீடிக்கவில்லை..
இந்த நிலையில் இன்று காலையில் குறைந்த தங்கம் விலை நண்பகலில் உயர்ந்துள்ளது.. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.170 அதிகரித்து ரூ.13,200-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ1360 அதிகரித்து, ரூ.1,05,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று காலை ரூ.2,160 குறைந்த நிலையில் நண்பகலில் ரூ.1360 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதே போல் வெள்ளி விலையும் இன்று காலை குறைந்திருந்த நிலையில் நண்பகலில் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.245க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 அதிகரித்து ரூ.2.45 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
Read More : நகைக் கடன் வாங்குவோருக்கு குட்நியூஸ்..! புதிய மாற்றங்கள் அமல்..!



