பொதுமக்கள் மற்றும் தணிக்கைக்கு உட்பட்ட நிறுவனங்களுக்காக Public Grievance Portal என்ற புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,பொதுமக்கள் மற்றும் தணிக்கைக்கு உட்பட்ட நிறுவனங்கள் தங்களது புகார்கள் மற்றும் சந்தேகங்களை எளிதாக பதிவு செய்து தீர்வு பெறும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி CAMS இணையதளத்தின் ஒரு பகுதியாக செயல்படுகிறது.
தலைமை தணிக்கை இயக்குநரின்கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை, மாநில அரசு தணிக்கைத் துறை, கூட்டுறவு தணிக்கைத் துறை, இந்து சமய அறநிறுவனங்களின் தணிக்கைத் துறை மற்றும் பால் கூட்டுறவுகளின் தணிக்கைத் துறை ஆகிய ஐந்து துறைகளின் சேவைகளை மேலும் வெளிப்படையாகவும், பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் மாற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் இந்த புதிய Public Grievance Portal மூலம் பொதுமக்கள் மற்றும் தணிக்கைக்கு உட்பட்ட நிறுவனங்கள் தங்களது புகார்கள், குறைகள் மற்றும் சந்தேகங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்காகவும், தங்களின் மனுக்களின் நிலையை கண்காணிப்பதற்காகவும், தேவையான தகவல்களையும் விரைவாகப் பெறுவதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வசதி மூலம் தணிக்கைத் துறையின் சேவைகள் டிஜிட்டல் முறையில் மேலும் வலுப்பெறுவதுடன், புகார் தீர்வு நடைமுறையும் எளிமையாகவும், விரைவாகவும் அமையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



