விருதுநகர் அருகே காரியப்பட்டியில் கல்குவாரியில் நிகழ்ந்த வெடி விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. ஆவியூர் அருகே கீழ உப்பிலிகுண்டு கிராமத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த வெடிவிபத்தில் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அச்சமும் எழுந்துள்ளது.
உழைப்பாளர்கள் தினத்தில் விபத்து நடந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கீழ உப்பிலிகுண்டு தனியார் கல் குவாரியை மூட வலியுறுத்தி கடம்பன்குளம் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
Read More : புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா..? உங்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!