உத்திரபிரதேசம் மாநிலத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர், பெண் ஆசிரியையுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியையும், சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் முதல்வராக இருக்கும் நபர் அந்தப் பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியையுடன் பள்ளி வளாகத்தில் உள்ள தனது அறையில் நெருக்கமாக இருந்துள்ளார். இருவரும் கட்டிப்பிடித்து ஒருவருக்கொருவர் முத்தமிட்டு கொண்டுள்ளனர். தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் காவல்துறையினர், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே இப்படி நடந்து கொள்ளலாமா.? என சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.