அமெரிக்காவில் மாணவருடன் முறைகேடாக உறவுகொண்ட விவகாரத்தில் ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மின்னெசொடாயில் பாடசாலை ஒன்று செயல்படுகிறது. அங்கு, 24 வயதான கெய்ட்லின் தாவோ என்பவர் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது, காலியான வகுப்பறையில் 17 வயது மாணவர் ஒருவருடன் ஆசிரியை வலுக்கட்டாயமாக உறவுகொண்டதாக கூறப்படுகிறது.
பின்னர், தப்பியோடிய அவருக்கு, கடந்த மே மாதம் ராம்சே கவுண்டி மாவட்ட நீதிமன்றத்தால் அவரைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் ராம்சே கவுண்டி மாவட்ட நீதிமன்றத்தில் கெய்ட்லி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மேலும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பு ஆறு மாதங்கள் வரை அவர் சிறையில் இருப்பார் என்றும், அத்துடன் அவர் உளவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்றும், அவரது தண்டனை செப்டம்பர் 10ம் தேதி அறிவிக்கப்பட்ட உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.