யூடியூப் சேனல் ஒன்று நடத்திய பிராங்க் ஷோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் பிஜிலி ரமேஷ். ரஜினியின் தீவிர ரசிகர் என்றும் இவரது பேச்சு மற்றும் முக பவானைகள் ரசிகர்களிடம் தனிகவனம் பெற்றது. கடந்த 2019ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி நடித்த ‘நட்பே துணை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களிலும் பிஜிலி ரமேஷ் நடித்து வந்தார். பொன்மகள் வந்தாள், ஆடை, கோமாளி உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். மதுப்பழக்கம் காரணமாக இவரது உடல்நிலை மோசமடைந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிஜிலி ரமேஷ், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இவரது இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஜிலி ரமேஷின் உடல்நிலைக்கு என்ன ஆச்சு என அவரது மனைவி கூறுகையில், ”குடித்து குடித்து கல்லீரல் கெட்டுவிட்டதாக சொல்கிறார்கள். கால்கள் வீங்கிவிட்டது. வயிறும் வீங்கிவிட்டது. முகம் கூட வீங்கி இருந்தது. ஸ்டான்லியில் சிகிச்சை எடுத்ததால் அது குறைந்தது. அவரால் எழுந்து நடக்க முடியாது. சாப்பாடும் குறைந்துவிட்டது. நீராகாரமும் நிறைய கொடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் கூறினார்கள்.
கல்லீரல் முழுவதும் அழுகி விட்டது. கல்லீரல், கால் வீக்கத்தை எதுவும் செய்ய முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். இருக்கும் வரை இப்படியே இருக்க வேண்டியதுதான் என்றார்கள். ஆனால், எனக்கென்னவோ இது கல்லீரலால் ஏற்பட்டது போல் தெரியவில்லை. இவரை விட மொடா குடிகாரன் எல்லாம் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. எனவே, என் கணவருக்கு யாரோ ஏதோ செய்திருக்கிறார்கள் என சந்தேகம் கிளப்பியுள்ளார்.
பிஜிலி ரமேஷின் மனைவி சொல்ல வருவது அவருக்கு செய்வினை செய்துவிட்டார்கள் என்கிறாரா? இல்லை குடிக்கும் போது மதுவில் எதையாவது கலந்து கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அவரை சாகடிக்க முயற்சித்துள்ளார்கள் என சொல்கிறாரா? என்பது தெரியவில்லை. இன்று அதிகாலை பிஜிலி ரமேஷ் உயிரிழந்துவிட்டார். இதன் பிறகு அவருடைய மனைவி என்ன நடந்தது என்ற உண்மையை சொல்ல கூடும் என தெரிகிறது.
Read More : ’கொட்டுக்காளி’ படம் தோல்வியை சந்திக்க இவர் தான் காரணமா..? சிவகார்த்திகேயன் தான் இதை செய்தாரா..?