fbpx

பாஜகவில் இருந்து விலகி மீண்டும் எடப்பாடி அணியில் இணையும் மைத்ரேயன்..? நேரில் சந்தித்து ஆதரவு..?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக பிரமுகர் மைத்ரேயன் சந்தித்துள்ளதாக கூறப்படும் நிலையில், மீண்டும் அவர் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து மைத்ரேயனை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2022ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கினார். இதனை அடுத்து மைத்ரேயன் பாஜகவில் இணைந்து கொண்டார். இந்நிலையில், தற்போது அவர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகின.

கடந்த 2023ஆம் ஆண்டு பாஜகவில் பெரும் எதிர்பார்ப்புடன் மைத்ரேயன் இணைந்த நிலையில், அவருக்கு அங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான், எடப்பாடி பழனிசாமியை மைத்ரேயன் சந்தித்துள்ளதாகவும், மீண்டும் அதிமுகவில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து பேட்டி அளித்த மைத்ரேயன் எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தெரிவித்தார்.

Read More : வாகன ஓட்டிகளே..!! உடனே நம்பர் பிளேட்டை மாத்துங்க..!! செப்.15-க்கு பிறகு சிக்கனால் அபராதம் தான்..!!

English Summary

While BJP leader Maitreyan is said to have met AIADMK General Secretary Edappadi Palaniswami, it has been reported that he will join AIADMK again.

Chella

Next Post

வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்..!! ஒரே வாரத்தில் 15 பேர் உயிரிழப்பு..!! குஜராத்தில் அதிர்ச்சி..!!

Thu Sep 12 , 2024
As the state of Gujarat has received heavy rains for the past few days, the daily life of the people has been severely affected and suffered. Following this, the health department has informed that many people are currently suffering from mysterious fever.

You May Like