fbpx

அரசுப் பள்ளி மாணவிகள் சிகரெட் புகைக்கும் அதிர்ச்சி வீடியோ..!! பஸ் ஸ்டாண்டில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!

பள்ளி மாணவிகள் பேருந்தில் பீர் குடித்த வீடியோக்கள், பள்ளி வகுப்பறையில் பீர் குடித்த வீடியோக்கள் உள்ளிட்டவை சோஷியல் மீடியாக்களில் வைரலாகி நிலையில், தற்போது பேருந்து நிலையத்தில் மாணவிகள் சிகரெட் புகைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பள்ளி மாணவிகள், இரண்டு பேர் பள்ளி சீருடையுடன் பொதுவெளியில் புகைபிடித்துக் கொண்டிருக்கின்றனர். இது குறித்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பொதுமக்களும், மாணவர்களின் பெற்றோர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் ஒருபக்கம் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். மற்றொரு பக்கம் தமிழகம் முழுவதுமே அரசுப் பள்ளிகளின் தரத்தையும், மாணவர்களின் கற்றல் திறனையும், ஒழுக்கத்தையும் மேம்படுத்த அரசு நிஜமாகவே நடவடிக்கை எடுக்கிறதா? இந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை மோசமாக செயல்பட்டு வருகிறது. மாணவர்களின் எதிர்கால நலனில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Read More : உங்கள் பணம் பறிபோகாமல் இருக்க ஆதாரை உடனே லாக் பண்ணுங்க..!! ரொம்ப ஈசிதான்..!! நீங்களே பண்ணலாம்..!!

English Summary

Now, a video of female students smoking cigarettes at the bus station has come out and has caused a shock.

Chella

Next Post

குட் நியூஸ்..! மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி..! விரைவில் வெளியாகும் அறிவிப்பு..!

Tue Oct 15 , 2024
It is also expected to roll out before Diwali as per 3% discount for central government employees.

You May Like