fbpx

LLB படிப்புக்கான கலந்தாய்வு… மின்னஞ்சல் வாயிலாக 23-ம் தேதி மாலை 5.45 மணி வரை சமர்ப்பிக்கலாம்….!

ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசின் முகவராக இருந்து தமிழ்நாட்டில் அமையப் பெற்றுள்ள 23 சட்டக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் 5 ஆண்டு பி.ஏ.எல்.எல்.பி சட்டப் படிப்பிற்கான (முறைசார்) மாணவர்கள் சேர்க்கையினை ஒருங்கிணைந்த ஒற்றைச்சாளர சேர்க்கை முறையில் நடத்தி வருகிறது.

மேலும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த B.A.LL.B.(Hons.), B.B.A.LL.B.(Hons.), B.Com.LL.B. (Hons.) , B.C.A.LL.B. (Hons.) சட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் நடத்தி வருகிறது. இந்த நிலையில் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் 3 ஆண்டு எல்எல்பி படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் சான்றிதழ்களை மின்னஞ்சல் வாயிலாக அக்.23-ம் தேதி மாலை 5.45 மணி வரை சமர்ப்பிக்கலாம்.

சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் 3 ஆண்டு எல்எல்பி படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் சான்றிதழ்களை மின்னஞ்சல் வாயிலாக அக்.23-ம் தேதி மாலை 5.45 மணி வரை சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் சரிபார்ப்பு அக்.23 வரை நடைபெறும். கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை 26-ம் தேதி இணையவழியில் வழங்கப்படும். சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் அக்.28 முதல் 30-ம் தேதிக்குள் சேர்ந்துவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Counseling for LLB course can be submitted through email till 5.45 pm on 23rd

Vignesh

Next Post

’வாய் மொழியில் வித்தை காட்டுவது நம் வேலையல்ல’..!! ’இவர்கள் யாரும் மாநாட்டிற்கு வர வேண்டாம்’..!! விஜய் பரபரப்பு அறிக்கை..!!

Mon Oct 21 , 2024
Vijay advised pregnant women, children and those who have been unwell for a long time not to come to the conference.

You May Like