fbpx

ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் தயார்!. நிபந்தனைகளை முன்வைத்த பிரதமர் நெதன்யாகு!

Israel: டெல் அவிவில் உள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் கிரியா தலைமையகத்தில் லெபனானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்க இஸ்ரேலிய அமைச்சரவை இன்று கூடும் என்று பிரதமர் நெதன்யாகு ஒப்புதல் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சந்திப்பு இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி நடைபெறும் என்று CNN செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாடு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புகளில், ஞாயிற்றுக்கிழமை இரவு இஸ்ரேலிய அதிகாரிகளுடன் நடந்த பாதுகப்பு ஆலோசனையின்போது ஹிஸ்புல்லாவுடன் உருவாகி வரும் போர் நிறுத்தத்திற்கான தனது சாத்தியமான ஒப்புதலை பிரதமர் நெதன்யாகு அடையாளம் காட்டியதாக கூறப்படுகிறது. பிரதமர் நெதன்யாகுவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இஸ்ரேலிய அமைச்சரவை முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் மீது வாக்களிக்கப்பட்டு அது நிறைவேற்றப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த முன்மொழிவு மூன்று கட்டங்களை உள்ளடக்கியதாக ஹாரெட்ஸ் தெரிவிக்கிறது. போர்நிறுத்தம் பின்னர் லிட்டானி ஆற்றின் வடக்கே ஹெஸ்பொல்லா தனது படைகளை திரும்பப் பெறுதல். இரண்டாவது- தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேறுதல் மற்றும் மூன்றாவது- சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளை வரையறுப்பது தொடர்பான இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தை ஆகியவை அடங்கும் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் நிபந்தனை: போர்நிறுத்தத்தை கண்காணிக்கும் பணியில் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச அமைப்பு செயல்படும் என்றும், ஹெஸ்பொல்லா போர் நிறுத்த விதிமுறைகளை மீறினால், லெபனான் ராணுவம் மற்றும் சர்வதேச படைகளுக்கு வாஷிங்டனிடம் இருந்து கடிதம் வரும் இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான அதன் உரிமை உறுதிப்படுத்தப்படும் என்று இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Readmore: வந்தாச்சு PAN 2.0!. QR கோடு அம்சத்துடன் அறிமுகம்!. மத்திய அரசு அதிரடி

English Summary

Israel is ready for a ceasefire with Hezbollah! Prime Minister Netanyahu presented the conditions!

Kokila

Next Post

சற்றுமுன்...! கனமழை காரணமாக மேலும் ஒரு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை...!

Tue Nov 26 , 2024
A holiday has been declared for schools in Thanjavur district today due to heavy rains.

You May Like