fbpx

BREAKING | தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!

பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு போனஸ் அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 மிகை ஊதியம் வழங்கப்படும். தொகுப்பூதியம் உள்ளிட்டவை பெறும் முழு, பகுதிநேரப் பணியாளர்களுக்கு ரூ.1,000 போனஸ் வழங்கப்படும்.

சி மற்றும் டி பிரிவை சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்களுக்கு ரூ.500 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க ஏதுவாக ரூ.163.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

Read More : BREAKING | கேப்டன் பதவியில் இருந்து விலகினார் ரோகித் சர்மா..!! புதிய கேப்டனாக பும்ரா நியமனம்..!!

English Summary

With the Pongal festival to be celebrated on the 15th, the Tamil Nadu government has announced a bonus for government employees.

Chella

Next Post

இனி மொபைல் டவர் தேவையில்லையா? விண்வெளியில் இருந்து ஸ்மாட்போனுக்கு நேரடி கனெக்ஷன்..!! - ISRO வின் அடுத்த மைல்கல்

Thu Jan 2 , 2025
US Satellite Launch By ISRO May Make Phone Calls Directly Via Space A Reality

You May Like