குஜராத் மாநிலத்தில் நீரில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வாபியில் உள்ள கே.பி.எஸ். கல்லூரியைச் சேர்ந்த 8 மாணவர்கள், நேற்று மாலை வல்சாத் மாவட்டத்தில் உள்ள கோலி நதி உருவாகும் இடமான பாண்டவ் குண்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது, அதில் ஒரு மாணவர் குளிப்பதற்காக ஆற்றில் குதித்துள்ளார். ஆனால், அவர் நீரில் மூழ்கியதால், அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் 4 பேர் அவரை காப்பாற்ற அடுத்தடுத்து குதித்தனர். இதில், அனைவருமே நீருக்குள் மூழ்கினர்.
இதனால், சக மாணவர்கள் கத்திக் கூச்சலிட்டனர். இதையடுத்து, ரோஹியா தலாத் கிராமத்தை சேர்ந்த சிலர், நீரில் மூழ்கிய 5 மாணவர்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர், அவர்கள் உடனடியாக கப்ரடாவில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், சக மாணவரை காப்பற்ற சென்ற 4 மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நீரில் மூழ்கிய சக மாணவரை காப்பற்ற சென்ற 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More : ’என் பொண்ணுகிட்டையே உன் வேலைய காட்டுறியா’..? திருமணமான இளைஞரை துண்டாக்கி உடலை எரித்த சிறுமியின் தந்தை..!!