fbpx

’45 உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படும்’..!! கட்டுமான தொழிலாளர்களுக்கு முழு உடல் பரிசோதனைக்கான அட்டை..!!

தமிழக சட்டப்பேரவையில் 2025 – 26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

➥ அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு.

➥ சென்னையில் ரூ.100 கோடியில் சிங்கப்பூர் உதவியுடன் அறிவியல் மையம் அமைக்கப்படும்.

➥ தமிழ்நாடு உயர்கல்வித்துறைக்கு ரூ.8,494 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

➥ அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ள ரூ.10 கோடி ஒதுக்கீடு.

➥ 8 மாவட்டங்களில் புதிதாக அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும்.

➥ பள்ளி பாடத்திட்டத்தில் சதுரங்கம் விளையாட்டு சேர்க்கப்படும்.

➥ 40 வயதுக்கு மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனைக்கான அட்டை வழங்கப்படும்.

➥ தலை சிறந்த 500 தமிழ் இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

➥ 45 உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படும்.

Read More : TN BUDGET | ’காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்’..!! ’2,676 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்’..!! அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!!

English Summary

A project to translate 500 of the best Tamil literary works into English will be implemented.

Chella

Next Post

Tn Budget : கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து சிறுமிகளுக்கும் தடுப்பூசி.. பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு..

Fri Mar 14 , 2025
2025-26-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார். தமிழக பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்: திசையன்விளை, காங்கேயம், மணப்பாறை உள்ளிட்ட 10 இடங்களில் புதிய அரசு தொழிற் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். 40 வயதுக்கு மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனைக்கான அட்டை வழங்கப்படும். இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு குழு […]

You May Like