அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி சம்பளம் வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கடைசி தேதி வந்துவிட்டால், உடனே சம்பளம் வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆகிவிடும். அதன்படி, மாத இறுதி நாளான 30 அல்லது 31ஆம் தேதியே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வந்துவிடும். ஒருவேளை கடைசி நாள் விடுமுறை நாளாக இருந்தால், முந்தைய நாளே சம்பளம் போடப்பட்டுவிடும்.
ஆனால், நடப்பு மார்ச் மாதத்திற்கான சம்பள தேதியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி சம்பளம் வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி வருடாந்திர கணக்கை முடிப்பதால், அந்த நாளில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு ஊழியர்களுக்கு ஏப்.2ஆம் தேதி சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.