10 ஆம் வகுப்பு மாணவன் மீது இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை.. தலை நசுங்கி பரிதாப பலி..!!

WhatsApp Image 2025 06 24 at 7.58.38 AM

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே செங்கிலிகுப்பம் பகுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பழுதடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், 10ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


செங்கிலிகுப்பத்தைச் சேர்ந்த இளங்கோவன், சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மனைவி சரிதா, 16 வயது மகன் வெற்றிமாறனை வளர்த்து வந்தார். ஆம்பூர் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த வெற்றிமாறன், நேற்று (ஜூன் 23) பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது, உணவு சாப்பிடுவதற்காக வீட்டில் அமர்ந்திருந்தபோது, ஏற்கனவே விரிசல் ஏற்பட்ட பழைய சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அதில் சிக்கிய சிறுவன் தலைநசுங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வீட்டின் சத்தம் கேட்டவுடன் ஓடிய வந்து பார்த்த சரிதா மற்றும் உறவினர்கள், நடந்ததை உணர்ந்ததும் கதறி அழுதனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெற்றிமாறனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கணவனை இழந்த சரிதா, தற்போது தனது ஒரே மகனையும் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “பழுதடைந்த வீட்டில் வசித்து வந்தவர்களுக்கு அரசு வீடமைப்புத் திட்டத்தின் கீழ் உடனடி உதவி வழங்க வேண்டும். மேலும், இப்படியான குடும்பங்களுக்கு விரைவில் நிவாரண நிதி மற்றும் மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Read more: நவக்கிரக பிரதிஷ்டை: சபரிமலையில் ஜூலை 11 ஆம் தேதி நடை திறப்பு..!! – ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

Next Post

தண்ணீர் தரவில்லை என்றால் வன்முறையை கையில் எடுப்போம்..!! - இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்

Tue Jun 24 , 2025
இந்தியா தண்ணீர் திறந்து விடவில்லை என்றால், பாகிஸ்தான் போரில் ஈடுபடும் என பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான பிலாவல் பூட்டோ சர்தாரி தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீர் தகராறைத் தீர்க்கவும், சிந்து நதிப் படுகையின் ஆறு முக்கிய நதிகளின் நீரைப் பகிர்ந்து கொள்ளவும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் 1960 இல் கையெழுத்தானது. ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, […]
Pakistan

You May Like