நண்பனை கொலை செய்ய ChatGPT-யிடம் ஐடியா கேட்ட 13 வயது மாணவன்.. பள்ளியில் வைத்து நடந்த பகீர் சம்பவம்..!!

ChatGPT in Schools ap 2023 08 10 1

புளோரிடா மாநிலத்தில் 13 வயது மாணவன் ஒருவர், ChatGPT-யிடம் “என் நண்பரை எப்படிக் கொல்வது?” என்று கேள்வி எழுப்பியதற்காக கைது செய்யப்பட்ட சம்பவம், உலகம் முழுவதும் கல்வி மற்றும் தொழில்நுட்ப வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் டெலாண்டில் அமைந்துள்ளது சவுத்வெஸ்டர்ன் நடுநிலைப் பள்ளி. அந்தப் பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவர் ஒருவர், வகுப்பு நேரத்தில் பள்ளி வழங்கிய கணினியில் ChatGPT-யிடம் “வகுப்பின் நடுவில் என் நண்பரை எப்படிக் கொல்வது?” என்ற கேள்வியை கேட்டுள்ளார்.

இந்தச் செயல் பள்ளியின் டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பில் (digital monitoring system) உடனடியாக பதிவு செய்யப்பட்டது. அந்த மென்பொருள், மாணவர்கள் இணையத்தில் எழுதும் சந்தேகமான அல்லது ஆபத்தான கேள்விகளை தானாகவே கண்காணித்து பள்ளி நிர்வாகத்திற்கும் போலீசாருக்கும் எச்சரிக்கை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

எச்சரிக்கை வந்தவுடன் போலீசார் விரைந்து பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர், அந்த மாணவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், “யாரையும் கொலை செய்யும் நோக்கம் இல்லை; வெறும் கேலியாக எழுதியேன்” என மாணவன் விளக்கம் அளித்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம், AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு பள்ளிகளில் எவ்வளவு பொறுப்புடன் கையாளப்பட வேண்டும் என்பதற்கான கடுமையான எச்சரிக்கையாக மாறியுள்ளது.

Read more: ஒரே ஆண்டில் தமிழகத்தில் 15,796 பேருக்கு டெங்கு பாதிப்பு…! மக்களுக்கு விழிப்புணர்வு…! அமைச்சர் மா.சு தகவல்…!

English Summary

A 13-year-old student asked ChatGPT for an idea to kill his friend.. The next incident was a brutal one..!!

Next Post

முன்கூட்டியே வங்கி கணக்கில் பி.எம் கிசான் ரூ.2000 உதவித்தொகை விடுவிப்பு...! இவர்களுக்கு மட்டும்

Wed Oct 8 , 2025
ஜம்மு காஷ்மீரில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்காக பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதித்திட்டத்தின் 21-வது தவணையை முன்கூட்டியே மத்திய வேளாண் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் நேற்று விடுவித்தார். பி.எம்.கிசான் என்பது, சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்கில் ஆண்டுதோறும் ரூ.6,000 பெறும் வகையில், இந்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமான ஆதரவை வழங்குவதை […]
farmers 2025

You May Like