14 வயது காதலியை காட்டுக்குள் வைத்து கதற கதற பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன்..!! கொடூரமாக கிடந்த உடல்..!!

Kerala 2025

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், நீலம்பூர் பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு கொடூரமான கொலை சம்பவம், அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. பள்ளியில் பயிலும் சிறுவர்களிடையே ஏற்பட்ட காதலும், அதன் விளைவாக ஏற்பட்ட ஆத்திரமும் ஒரு 14 வயது மாணவியின் உயிரைப் பறித்துள்ளது. அதே பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் 16 வயது மாணவன், 9-ஆம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்து படுகொலை செய்துள்ள தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.


சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்ற மாணவி மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், வனியம்பலம் ரயில் நிலையம் அருகிலுள்ள வனப்பகுதியில் மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பள்ளிச் சீருடையுடன், கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த மாணவியின் தோற்றம் காண்போரை நிலைகுலைய செய்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த மாணவியின் காதலனான 16 வயது மாணவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தனக்கும் அந்த மாணவிக்கும் இடையே காதல் இருந்ததாகவும், சமீபத்தில் காதலை முறித்துக் கொள்ளலாம் என்று அந்த மாணவி கூறியதாகவும் அவன் தெரிவித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அவன், மாணவியை திட்டமிட்டு வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததோடு, கழுத்தை நெரித்துக் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டான்.

தற்போது அந்த மாணவனை கைது செய்துள்ள போலீசார், அவரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர். மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை..!! மாதம் ரூ.53,000 சம்பளம்..!! சென்னையிலும் காலியிடங்கள்..!!

CHELLA

Next Post

அமாவாசையில் பிறந்தால் அதிர்ஷ்டமா..? அவர்களின் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் தெரியுமா..?

Sun Jan 18 , 2026
வேத ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு நபர் பிறக்கும் திதி அவரது குணாதிசயங்களையும் வாழ்வியல் முறையையும் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில், சூரியனும் சந்திரனும் இணையும் ‘அமாவாசை’ திதியில் பிறக்கும் நபர்கள், அதீத அறிவுத்திறன் மற்றும் ஆளுமைப் பண்பு கொண்டவர்களாக திகழ்கின்றனர். ஒன்பது கிரகங்களும் வலுப்பெறும் இந்தத் திதியில் பிறப்பவர்கள், வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல் தங்களுக்குத் தேவையான பாதையை தாங்களே உருவாக்கிக் கொள்ளும் உத்வேகம் கொண்டவர்களாக விளங்குவார்கள். அமாவாசை திதியில் […]
Baby 2026

You May Like