“அய்யோ என் பல்லு போச்சே”! 30 நபர்களை விசாரணைக்கு அழைத்து பல்லை பிடுங்கியதா காவல்துறை???

அம்பை சரக்கத்தில் உதவி எஸ்.பியாக பணியாற்றி வரும் காவல்துறை அதிகாரி குற்றவாளிகளின் பற்களை பிடுங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் அம்பை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உதவி எஸ் பியாக பணியாற்றி வருபவர் பல்பீர் சிங். இவர் குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு விசாரணை என்ற பெயரில் பயங்கரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இவர் விசாரணை என்று வருபவர்களை அழைத்துச் சென்று அவர்களது பற்களை பிடுங்கி விடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான கருத்துக்கள் சமூக வலைதளங்களிலும் பரவப்பட்டு வந்தன.


இந்நிலையில் அம்பை சரகத்திற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வி கே புரம், பாப்பாக்குடி மற்றும் அம்பை அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய ஐந்து காவல் நிலையங்களிலும் 30க்கும் மேற்பட்டோருக்கு இவர் பற்களை பிடுங்கி கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது . இந்தப் புகார் டிஜிபியின் பார்வைக்கு சென்றது. குற்றவாளிகளுக்கு விசாரணை என்ற பெயரில் பற்களை புடுங்கிய உதவி எஸ்பி பல்வீர் சிங்கை தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தார் டிஜிபி. குற்றவாளிகளிடம் கடுமையாக நடந்து கொண்ட உதவி எஸ்பி பல்பீர் சிங்கிற்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. குற்றம் புரிந்த குற்றவாளிகளுக்கு நூதனமான முறையில் அவர்களை கொடுமைப்படுத்திய பல்பீர் சிங்கின் நடவடிக்கைகள் மிருகத்தனம் வாய்ந்ததாக இருந்தது என அவரிடம் விசாரணைக்கு சென்ற குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

13 ஆண்டுகளுக்குப் பிறகு..!! மீண்டும் இயக்குனராக களமிறங்கும் சசிகுமார்..!!

Mon Mar 27 , 2023
‘நான் மிருகமாய் மாறினால்’, ‘அயோத்தி’ உள்ளிட்ட திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இயக்குநர் சசிகுமார், நேரமின்மையால் படம் இயக்குவதை தவிர்த்து வந்தார். இந்நிலையில், 13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அவர் படம் இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அனுராக் காஷ்யப் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கதாநாயகனாக சசிகுமார் நாடோடிகள், சுந்தரபாண்டியன், குட்டி புலி, வெற்றிவேல், கிடாரி, நாடோடிகள் 2, […]
13 ஆண்டுகளுக்குப் பிறகு..!! மீண்டும் இயக்குனராக களமிறங்கும் சசிகுமார்..!!

You May Like