மாநில விருது பெற்ற நடிகர் அகில் விஸ்வநாத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மலையாளத் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2019 ஆம் ஆண்டு கேரளா மாநில திரைப்பட விருது வென்ற ‘சோழா’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான மலையாள நடிகர் அகில் விஸ்வநாத். இந்த நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. அவருக்கு வயது 30. அகில் தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.. வேலைக்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்த அவரது தாய் கீதா, வீட்டின் உள்ளே அவர் தூக்கில் தொங்குவதைக் கண்டறிந்ததாக கூறப்படுகிறது.. அவரது அகால மரணம் குறித்த இந்த அதிர்ச்சியூட்டும் செய்தி மலையாளத் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அகில் விஸ்வநாத் சமீபகாலமாகத் திரைப்படங்களில் பெரிதாக நடிக்கவில்லை. அவர் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கோட்டாலி என்ற இடத்தில் ஒரு மொபைல் போன் கடையில் மெக்கானிக்காகப் பணிபுரிந்து வந்தார். இருப்பினும், சில காரணங்களால் சில காலமாக வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அகிலின் மரணம் குறித்த செய்தி வெளியான நிலையில், ‘சோழா’ திரைப்படத்தின் இயக்குநர் சனல் குமார் சசிதரன், இணை நடிகர் ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
இயக்குநர் சனல் குமார் சசிதரன் தனது ஃபேஸ்புக்கில் மலையாளத்தில் எழுதியிருப்பதாவது, “அகில் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி மனதை நொறுக்குகிறது. அவர் வறுமையின் ஆழத்திலிருந்து சினிமாவுக்கு வந்தார். ஒரே ஒரு படமான ‘சோழா’வே மலையாள சினிமாவில் ஒரு நடிகராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவருக்குப் போதுமானதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை.
“அகில் தற்கொலை செய்துகொண்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவர் விரைவில் ஒரு புதிய படத்தில் நடிக்கத் தயாராகி வந்ததை நான் அறிவேன். அகில், நான் மிகுந்த துயரத்தில் இருக்கிறேன். இந்த அகால மரணத்திற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். அன்பால் நிறைந்த உங்கள் புன்னகை மீண்டும் என்னை வந்து தொடட்டும்.” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்..
முன்னதாக ‘சோழா’ திரைப்படத்தில் அகில் விஸ்வநாத்துடன் பணியாற்றிய பிரபல நடிகர்-திரைப்படத் தயாரிப்பாளர் ஜோஜு ஜார்ஜ், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். அவர்களின் திரைப்பட விளம்பரங்களின் போது எடுக்கப்பட்ட பழைய படங்களைப் பகிர்ந்து, அவர், “அகில், ஆத்மா சாந்தியடையட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Read More : “ என்னை வாழ வைக்கும் தெய்வங்களான..” பிறந்தநாளில் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி..!



