விவசாய பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்..!! வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம்..!! தமிழ்நாடு அரசின் அசத்தல் திட்டம்..!!

Agri 2026

தமிழ்நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயப் பெருமக்களுக்கும், விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் அரணாக விளங்குவது ‘முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்’. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அடையாள அட்டை, வெறும் காகிதமல்ல; அது விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் ஒரு காப்பீட்டு ஆவணம். குறிப்பாக, இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும் பெண் உறுப்பினர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வாரி வழங்குகிறது.


இத்திட்டத்தின் கீழ் பெண் உறுப்பினர்களுக்குத் திருமண உதவித்தொகையாக 10,000 ரூபாயும், பேறுகாலத்தின் போது மகப்பேறு நிதியுதவியும் வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல், எதிர்பாராத விபத்து நேரிட்டால் நிவாரணத் தொகை, இயற்கை மரணத்திற்கு ஈமச்சடங்கு நிதி மற்றும் முதியோர் ஓய்வூதியம் என ஒரு மனிதரின் வாழ்நாள் முழுவதும் தேவைப்படும் நிதி உதவிகளை இந்த அடையாள அட்டை உறுதி செய்கிறது.

மேலும், விவசாயிகளின் பிள்ளைகள் தடையின்றி உயர்கல்வி பயில ஏதுவாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையும் இத்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. இத்திட்டத்தில் இணைய 18 முதல் 65 வயதிற்குட்பட்ட நிலமற்ற விவசாயக் கூலிகள் அல்லது குறைந்த நிலம் கொண்ட விவசாயிகள் தகுதியுடையவர்கள். நிலம் வைத்திருப்பவர்கள் எனில், 2.50 ஏக்கர் நன்செய் நிலம் அல்லது 5 ஏக்கர் புன்செய் நிலத்திற்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்பது விதியாகும்.

தகுதியுள்ள பெண்கள் தங்களின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கிப் புத்தக நகல் மற்றும் புகைப்படங்களுடன் தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலரை (VAO) அணுகலாம் அல்லது அருகில் உள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். அரசின் இந்த நேரடி நிதியுதவிகள், விளிம்பு நிலையில் உள்ள விவசாய குடும்பங்களுக்குப் பெரும் பொருளாதாரப் பாதுகாப்பை வழங்குகின்றன.

Read More : ஆதார் கார்டு மூலம் ரூ. 90,000 கடன்..! மோடி அரசு சொன்ன குட்நியூஸ்..!

CHELLA

Next Post

அனல் பறக்கும் அரசியல் களம்..!! விஜய் போட்டியிடும் தொகுதி இதுதான்..? கதிகலங்கி நிற்கும் திமுக, அதிமுக..!!

Sat Jan 24 , 2026
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. கடந்த காலத் தேர்தல் நடைமுறைகளை வைத்துப் பார்த்தால், பிப்ரவரி இறுதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் தேதிகளை அறிவித்து, ஏப்ரல் மாதத்தில் வாக்குப்பதிவும், மே முதல் வாரத்தில் முடிவுகளும் வெளியாக வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில், தமிழக அரசியலின் ‘ஹாட் டாபிக்’ ஆக மாறியிருப்பது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் களம் […]
tvk vijay

You May Like