ஜோதிடத்தின்படி, கிரகங்கள் அவ்வப்போது தங்கள் நிலையை மாற்றிக்கொள்வதோடு, குறிப்பிட்ட காலகட்டத்தில் இரட்டிப்பு சக்தியுடன் பயணிக்கும். இந்த மாற்றங்கள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் தற்போது மீன ராசியில் வக்ர நிலையில் இருந்து வருகிறார்.
வரும் செப்.27-ஆம் தேதி, சூரியனின் பார்வை சனியின் மீது விழுவதால், சனி பகவான் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டிப்பு சக்தியுடன் பயணிக்க இருக்கிறார். இதன் மூலம் 3 ராசிக்காரர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது.
ரிஷபம் : சனியின் இரட்டிப்பு சக்தியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். வேலைக்கு செல்வோருக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஏற்கனவே முதலீடு செய்திருந்தால், அதில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான பல வழிகள் திறக்கப்படும். அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் வாழ்க்கையில் நல்ல உயரத்தை அடையலாம்.
மிதுனம் : மிதுன ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலதிபர்கள் சிறப்பான லாபத்தை பெறுவார்கள். பணியில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
விருச்சிகம் : விருச்சிக ராசிக்காரர்கள் சனியின் இரட்டிப்பு சக்தியால் இருமடங்கு நன்மைகளை பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகளும் தேடி வரும். தொழிலதிபர்கள் நல்ல லாபம் ஈட்டி, தங்கள் நிதி நிலையை வலுப்படுத்துவார்கள். அதிகம் சேமிக்க முடியும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
Read More : குலதெய்வ கோவிலுக்கு சென்றுவிட்டு வேறு கோவிலுக்கு செல்லலாமா..? ஆன்மீகம் சொல்வது என்ன..?



