அழகான உதடுக்கு ஆசைப்பட்ட மாடல்..!! இறுதியில் படுபயங்கரமாக மாறிய லிப்ஸ்..!!

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜெசிக்கா புர்கோ. இவர் சமூக ஊடகவியலாளர் மற்றும் மாடல் அழகியாகவும் உள்ளார். இவர் உதட்டை அழகாக்குவதற்காக லிப் ஃபில்லர் எனப்படும் சிகிச்சையை ஒரு மையத்தில் எடுத்து வந்துள்ளார். இதுவரை அவர் 6 முறை அந்த சிகிச்சையை எடுத்துள்ளார். இதனால் அவருக்கு மருத்துவர் போன் செய்து தற்போது மார்க்கெட்டில் புதிதாக லிப் பில்லர் வந்துள்ளது. அதை உங்களுக்கு இலவசமாக தருகிறேன், வாருங்கள் என கூறியுள்ளார். ஜெசிக்காவும் கூடுதல் அழகை பெறலாம் என்ற ஆசையுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அந்த மருத்துவர் ஜெசிகாவுக்கு லிப் பில்லரை செலுத்தியுள்ளார்.


அவ்வாறு லிப் பில்லர் செலுத்திய சில மணித்துளிகளில் உதடுகள் வீங்கத் தொடங்கிவிட்டன. லேசாக வீங்கிய போது ஏதோ அலர்ஜி ஏற்பட்டுவிட்டது என்றுதான் நினைத்துள்ளார். ஆனால் நேரம் ஆக நேரம் ஆக திடீரென அளவுக்கு அதிகமாக பெரிதாகிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெசிகா வீடியோ வெளியிட்டு தனது மனக்குமுறலை கொட்டி தீர்த்துள்ளார். இது போல் உதடு வீங்கியதுமே அந்த ஸ்டீராய்டு ஊசியை உதட்டில் செலுத்தவதை நிறுத்திக் கொண்டாராம். இதனால் உதடுகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. ஜெசிகா தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். மேலும், யாராவது இலவசம் என சொன்னால் தயவு செய்து யாரும் அதை நம்பி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

CHELLA

Next Post

இந்த திட்டத்தில் முதலீடு செய்திருப்பவரா நீங்கள்..? உடனே வேலையை முடித்துவிடுங்கள்..!! வெளியான அறிவிப்பு..!!

Tue Apr 18 , 2023
இந்திய குடிமக்களுக்கு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் கார்டு இருக்கிறது. இந்நிலையில், பொது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திருப்பவர்கள் தங்களுடைய கணக்குடன் ஆதார் எண், பான் எண்ணை செப்.30ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதோடு பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது ஓய்வுகால சேமிப்பு திட்டம் என்பதால் அதில் பல பயனர்கள் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி ஓய்வுக் […]
Martin Lewis Saving pot in pictures 2270891

You May Like