வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.. 50 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.. வானிலை மையம் எச்சரிக்கை…

Cyclone Mocha 1

வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது.. இது வடமேற்கு திசையில் ஒடிசா மேற்கு வங்க கடலோரப் பகுதிகளை கடந்து நகரக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. வரும் 7-ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.


ஓரிரு இடங்களுக்கு பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.. இன்றும் நாளையும், தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களீல் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை எப்போது..? முதலமைச்சர் ஸ்டாலின் அப்டேட்..!

RUPA

Next Post

உலகில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டும் இந்த புதிய ரத்த வகை இருக்காம்.. விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!!

Thu Jun 26 , 2025
இரத்த வகைகள் என்றாலே நமக்கு A, B, AB, O ஆகியவை மட்டுமே தெரியும். ஆனால் தற்போது உலகெங்கும் பரவியுள்ள மருத்துவ அறிவை அதிர்ச்சியடையச் செய்யும் வகையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முற்றிலும் புதிய இரத்த வகையை கண்டறிந்துள்ளனர். அதற்கு “Quaddra Negative (குவாடா நெகட்டிவ்)” எனும் பெயர் அளிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு க்வாடலூப்பைச் சேர்ந்த 54 வயது பெண் ஒருவர், அறுவை சிகிச்சைக்கு முந்தைய வழக்கமான இரத்த […]
blood

You May Like