வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், “வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாகவும், இது வலுப்பெற்று புயலாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இதுமேலும் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ஆம் தேதி வடதமிழகம் – புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், நாகை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் என்றும் வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்” எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.