தேர்வு, நேர்காணல் கிடையாது.. தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் வேலை..!! செம அறிவிப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..

job 1 1

தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் ஆடியோமெட்ரிஷியன் (Audiometrist) பதவிக்கான மொத்தம் 11 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பதவியின் பெயர்: ஆடியோமெட்ரிஷியன்

கல்வித்தகுதி:

* விண்ணப்பதார்கள் 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது உயிரியல் ஆகிய பாடங்களை கொண்டு முடித்திருக்க வேண்டும்.

* ஆடியோமெட்ரி 1 ஆண்டு சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

* அல்லது கேட்கும் மொழி மற்றும் பேச்சு (DHLS) பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கலாம்.

* அல்லது ஆடியோலாஜி மற்றும் பேச்சு மொழி நோயியல் (BASLP) பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்கலாம்.

வயது வரம்பு:

  • குறைந்தபட்ச வயது: 18 வயது
  • அதிகபட்ச வயது: 32 வயது

தளர்வுகள்:

  • மாற்றுத்திறனாளிகள்: 42 வயது வரை
  • முன்னாள் ராணுவத்தினர்: 48 வயது வரை
  • கணவரை இழந்த பெண்கள்: 59 வயது வரை
  • எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, பிசி, பிசிஎம் பிரிவினருக்கு: உச்ச வயது வரம்பு கிடையாது.

சம்பளம்: ஆடியோமெட்ரிஷியன் பதவிக்கு நிலை 8 கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை கிடையாது. கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். சான்றிதழ், டிப்ளமோ, டிகிரி படிப்பிற்கு 50 சதவீதமும், 12ம் வகுப்பு தகுதிக்கு 30 சதவீதமும், 10-ம் வகுப்பிற்கு 20 சதவீதமும் வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது? தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள ஆடியோமெட்ரிஷியன் பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமாக உள்ளவர்கள் https://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.12.2025.

Read more: SIP திட்டம் மூலம் விரைவில் ரூ.1 கோடி இலக்கை அடைவது எப்படி..? லாபத்தை அதிகரிக்கும் சூட்சுமம் இதுதான்..!!

English Summary

A notification has been issued to fill the posts of Audiometrist in the Tamil Nadu Government Medical Department.

Next Post

திருப்பரங்குன்றம் விவகாரம்.. நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் அமளி.. மக்களவை ஒத்திவைப்பு..

Fri Dec 5 , 2025
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திற்கு பதிலாக மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று ராம ரவிக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற  மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றபட்டது.. இதையடுத்து மனுதாரர் […]
parliament mps 1 1 1

You May Like