இந்திய விமானப்படையில் வேலை வேண்டுமா..? ரூ.1,77,500 வரை சம்பளம்.. விண்ணப்பம் தொடக்கம்..!!

indian air force

இந்திய விமானப்படையில் பறக்கும் பிரிவு, தரைப் பணியில் உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


வயது வரம்பு:

* பறக்கும் பிரிவிற்கு 2026 ஜூலை 1 தேதியின்படி, விண்ணப்பிக்கும் நபர்கள் 20 முதல் 24 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதார்கள் 2002 ஜூலை 2-ம் தேதி முதல் 2006 ஜூலை 1-ம் தேதி வரை பிறந்தவர்களாக இருக்கலாம்.

* தரைப்பணிக்கு 20 முதல் 26 வரை இருக்கலாம் விண்ணப்பதார்கள் 2026 ஜூலை 1 தேதி முதல் 2006 ஜூலை 1-ம் தேதி பிறந்தவர்களாக இருக்கலாம்.

கல்வித்தகுதி:

பறக்கும் பிரிவு: 12-ம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், கண்டிப்பாக கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொடர்ந்து, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு 60% மதிப்பெண்களுடன் அல்லது பொறியியல் படிப்பு 60% மதிப்பெண்களுடன் அல்லது Associate Membership of Institution of Engineers/ Aeronautical Society of India ஆகியவற்றின் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தரைப் பணி: தரைப்பணியில் தொழில்நுப்ட பிரிவிற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பல்வேறு பாடப்பிரிவுகளில் பொறியியல் பட்டப்படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்: இந்திய விமானப்படையில் அதிகாரியாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நிலை 10 கீழ் மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்திய விமானப்படைக்கு எழுத்துத் தேர்வு (AFCAT), விமானப்படை தேர்வு வாரியத்தின் நேர்காணல், உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் தேர்ச்சி பெறும் நபர்களில் இறுதியாக மெரிட் அடிப்படையில் பட்டியல் வெளியிடப்படும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஜூலை 2026 முதல் பயிற்சி வழங்கபப்டும். தொழில்நுப்ட பிரிவுகளுக்கு 62 வாரங்கள், தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகளுக்கு 52 வாரங்கள் பயிற்சி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்திய விமானப்படைக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://afcat.cdac.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க ஆதார் அட்டை கட்டாயமாகும். விண்ணப்பிக்கும் நபர்கள் திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும். பயிற்சி காலத்திலும் திருமணம் செய்ய அனுமதி கிடையாது.

Read more: JUSTIN| மன்னிப்பு கேட்டால் தான் கர்நாடகாவில் கோடிகளை சம்பாதிக்க முடியும்.. கமல்ஹாசனுக்கு உயர்நீதிமன்றம் கெடு..!!

Next Post

உயர் இரத்த அழுத்தம் எவ்வளவு அதிகமாக இருந்தால் மாரடைப்புக்கு வழிவகுக்கும்..? - எச்சரிக்கும் நிபுணர்கள்

Tue Jun 3 , 2025
சமீப காலமாக மாரடைப்பால் திடீர் மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன. அவர்களைப் பார்த்தால், ஆரம்ப அறிகுறிகள் இல்லாமல் அவர்கள் உயிரை இழக்கிறார்கள். பொதுவாக இரத்த அழுத்தம் அதிகரிப்பதால் மாரடைப்பு ஏற்படுகிறது என்பது தெரியும். ஆனால் இரத்த அழுத்தம் மாரடைப்பை எவ்வளவு அதிகரிக்கிறது தெரியுமா? மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக உயர் இரத்த அழுத்தம் (BP) அதிகரித்து வருகிறது. இந்தப் பின்னணியில்தான் திடீர் மாரடைப்பு மரணங்கள் நிகழ்கின்றன. […]
high blood pressure heart attack

You May Like