பொதுத்துறை வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்! உடனே விண்ணப்பிங்க..

Bank Jobs Recruitment.jpg 1

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் மொத்தம் 30 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.


பணியிட விவரம்:

MSME உறவு மேலாளர் – 30

வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 முதல் அதிகபடியாக 33 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதார்கள் 02.11.1992 முன்னரும் மற்றும் 01.11.2000 பின்னரும் பிறந்திருக்கக்கூடாது. அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி:

* அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

* மார்க்கெட்டிங் அல்லது நிதி (Finance) பிரிவில் MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எம்பிஏ முடித்தவர்களுக்கு முக்கிய முன்னுரிமை வழங்கப்படும்.

* MSME, Credit Management, Banking Relationship போன்ற துறைகளில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

* கல்வித்தகுதி 26.11.2025 தேதியின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

சம்பளம்: வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படும். எழுத்துத் தேர்வு என்பது எத்தனை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது என்பதை பொறுத்து அமையும்.

எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://punjabandsind.bank.in/content/recruitment என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 26.11.2025.

Read more: செல்லப்பிராணி வளர்ப்பவரா நீங்கள்..? வீட்டிற்கே வரும் அதிகாரிகள்.. இதைச் செய்யாவிட்டால் ரூ.5,000 அபராதம்..!

English Summary

A notification has been issued to fill vacant posts in the public sector bank Punjab and Sind Bank.

Next Post

ஓரினச்சேர்க்கைக்கு ஆசையோடு போன இளைஞர்.. காட்டுக்குள் கதறவிட்ட கும்பல்..!! ஆடிப்போன சென்னை ஐடி ஊழியர்..!!

Fri Nov 7 , 2025
இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, சிலர் டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்தி, முன் பின் தெரியாதவர்களை நம்பிச் சென்று, மோசடி மற்றும் மிரட்டலில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. “முதலை வாயில் தலையைக் கொடுப்பது போல” இளைஞர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்குச் சென்று சட்டவிரோத கும்பலிடம் சிக்கிக்கொள்கின்றனர். இத்தகைய ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த […]
Homo Sexual 2025

You May Like