ரத்த வெள்ளத்துடன், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்த நபர்!!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டியை சேர்ந்தவர் அஜித் குமார் வயது 28, இவர் நேற்று இரவு மதுபோதையில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆரோக்கிய மாதா தெருவில் வந்து கொண்டிருந்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அஜித் குமாரை கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளனர்.


ரத்த வெள்ளத்துடன் உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓடி வந்த அஜித் குமார் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள நத்தம் பேருந்து நிறுத்தம் அருகே மயங்கி கீழே விழுந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் அந்த நபரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அஜித் குமாரை படுகொலை செய்தது யார் எதற்காக கொலை செய்தனர் என திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsnation_Admin

Next Post

உங்களின் குழந்தை குளிர்காலத்தில் பிறந்துள்ளதா.. இந்த பதிவு உங்களுக்கு தான்..!

Mon Jan 2 , 2023
குளிர்காலம் மற்றும் கோடையில் பிறக்கும் குழந்தைகளுக்கு சிறப்பு பாதுகாப்பு தேவை என்ற உண்மையின் வெளிச்சத்தில், ஒரு சிலரின் அலட்சியத்தால் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்த வகையில், குளிர்காலத்தில் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகளை இந்த பதிவில் பார்க்கலாம். இன்றைய நவீன உலகில் இளம் குழந்தைகளை கவனித்துக்கொள்வது கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது. பெரும்பாலான தாய்மார்களுக்கு தங்கள் குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றிய தெளிவான புரிதல் இல்லை. புதிதாகப் பிறந்த குழந்தைகளை கவனித்துக்கொள்வது […]
newborn baby holding father parent finger sleeping rocking child daughter son hands authentic lifestyle parenting 181840779

You May Like