திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டியை சேர்ந்தவர் அஜித் குமார் வயது 28, இவர் நேற்று இரவு மதுபோதையில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆரோக்கிய மாதா தெருவில் வந்து கொண்டிருந்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அஜித் குமாரை கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளனர்.
ரத்த வெள்ளத்துடன் உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓடி வந்த அஜித் குமார் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள நத்தம் பேருந்து நிறுத்தம் அருகே மயங்கி கீழே விழுந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் அந்த நபரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அஜித் குமாரை படுகொலை செய்தது யார் எதற்காக கொலை செய்தனர் என திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.