30 வயது இளைஞரின் ஆணுறுப்பை நாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் கர்னல் மாவட்டம் பிஜ்னா என்ற கிராமத்தைச் சேர்ந்த கரண் (30). இவர், வழக்கம் போல் தனது வயலுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது தெருவில் சுற்றித் திரிந்த பிட்புல் வகை நாய் ஒன்று அவரை நோக்கி பாய்ந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கரண், நாயை அடித்து விரட்ட முயன்றுள்ளார். ஆனால், சற்றும் பின்வாங்காத பிட்புல் நாய், கரணின் அந்தரங்க உறுப்பை கடித்து குதறியுள்ள்து. இதில் படுகாயமடைந்த கரணை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நாய் சுமார் ஒருவார காலமாகவே அங்கு திரிந்து கொண்டிருந்ததாகவும், இந்த நாயிடம் ஏற்கனவே ஒரு ஊர்காரர் கடிபட்டுள்ளதாகவும் ஊர் மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து கிராம மக்கள், அந்த நாய்யை அடித்துக் கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து கரண் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.