மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார்..!! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

ஸ்ரீவில்லிபுத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


ராஜபாளையத்தை அடுத்த மலையடிப்பட்டியை சேர்ந்தவர் ஜோசப் ராஜா. இவர் தேவாலயம் ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில், தேவாலயத்திற்கு வந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி சிறுமின் தாயார் ஜோசப் ராஜா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே இவ்வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்நிலையில் பாதிரியார் ஜோசப் ராஜா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஜெயஆனந்த் தீர்ப்பளித்தார். இதனையடுத்து, பாதிரியார் ஜோசப் ராஜா சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CHELLA

Next Post

Fake Love..!! ’என்ன தான் இருந்தாலும் அவருதான் அதுல கில்லி’..!! கணவருடன் செல்ல மறுத்து அலப்பறை செய்த ஆண்ட்டி..!!

Fri Apr 21 , 2023
சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டை காவல் நிலையத்துக்கு நேற்று இளம்பெண்ணும், வாலிபரும் வந்தனர். அவர்களிடம், போலீசார் விசாரணை நடத்தியதில், ‘எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வையுங்கள்’ என்று அப்பெண் கூறியுள்ளார். இது திருமண மண்டபம் இல்லை. உங்கள் பெற்றோர் யார்? கழுத்தில் இருப்பது தாலி தானே? என போலீசார் கேள்வி எழுப்பினர். ”நாங்கள் இருவரும் காதலிக்கிறோம், எங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்” என்று இருவரும் அலப்பறை செய்துள்ளனர். இந்நிலையில், போலீசார் […]
WhatsApp Image 2023 03 19 at 3.25.11 PM

You May Like