ராணிப்பேட்டை மக்களுக்கு ஓர் அரியவாய்ப்பு!… 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!… வேலைவாய்ப்புக்கான முழுவிவரம் இதோ!

இராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் பணிக்காக இன சுழற்சி அடிப்படையில் 160 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பருவகால காவலர் பணிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு இளங்க்லை அறிவியல், வேளாண்மை மற்றும் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பருவகால காவலர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்க 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.இதற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு அஞ்சல் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அலுவலகத்தில் நேரில் சென்று பெற்றுகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நான்காவது ‘ஏ’பிளாக், இராணிப்பேட்டை . விண்ணப்பிக்க கடைசி நாள்- 03.05.2023 ஆகும்.

KOKILA

Next Post

கோடைக்காலம்!... மின்சார பயன்பாட்டை குறைக்க!... பஞ்சாப் அரசின் சூப்பர் திட்டம்!...

Wed Apr 12 , 2023
பஞ்சாப்பில் அதிகரித்து வரும் மின் தேவையை சீராக்கும் வகையில் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை மாற்றி அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சாப்பில் அதிகரித்து வரும் மின் தேவையை சீராக்கும் வகையில் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை மாற்றி அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சாப்பில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது வெயில் காலத்தையொட்டி மின்தேவை அதிகரித்துள்ளது. இந்த மின்தேவையை சீராக்கும் […]
Punjab CM 16586289064x3 1 e1663588754456

You May Like