திருமாலின் 108 திவ்யதேசங்களில் 48-வது தலமாகும் திருப்பாடகம் பாண்டவதூத பெருமாள் கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு ஆன்மிகப் பொக்கிஷமாக விளங்குகிறது. இத்தலத்தில், பாண்டவர்களின் தூதராக கண்ணன் தோன்றிய தருணமே, ஆலயத்தின் முக்கிய தரிசனமாக உள்ளது. இங்கு கிருஷ்ண பகவான், விஸ்வரூப தரிசனம் காட்டி காட்சி தருகிறார்.
நான்கு நிலை ராஜகோபுரங்களைக் கொண்ட இக்கோவில் பல்லவர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பிறகு சோழர்கள், விஜயநகர பேரரசர்களாலும் புனரமைக்கப்பட்டதாகவும், குலோத்துங்க சோழன், ராஜ ராஜ சோழன் ஆகியோரின் காலத்தில் கோவிலின் சுற்றுச் சுவர் உள்ளிட்டவைகள் எழுப்பப்பட்டு, இரண்டு குளங்கள் அமைக்கப்பட்டதாக கோல் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான வைணவ தலங்களில் இக்கோவிலும் ஒன்று. கிழக்கு நோக்கி அமைந்த நுழைவு வாயிலைக் கொண்ட இக்கோலில் மூலவர் பாண்டவர் தூதர் 25 அடி உயரத்தில் அமர்ந்த காலத்தில் காட்சி தருகிறார். 1000 முதல் 2000 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் அர்த்த மண்டபத்தில் ஆழ்வார்கள், உற்சவம், ராமானுஜர் உள்ளிட்டோரை தரிசிக்கலாம். மூலவருக்கு தெற்கு புறம் ருக்மணிக்கு தனி சன்னதி உள்ளது.
சக்கரத்தாழ்வார், அவரின் பின்புறம் நரசிம்மர் உருவம் காணப்படுகிறது. கோவிலின் வடகிழக்கு பகுதியில் மத்ஸ்ய தீர்த்தம் உள்ளது. பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை மங்களாசாசனம் செய்துள்ளனர்.
கிருஷ்ணர் அமர்ந்த நிலையில் காட்சி தருவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். வலது காலை மடக்கி, அரு்த்த பத்மாசன கோலத்தில் கிருஷ்ணர் காட்சி தருகிறார். மற்ற கோவில்களைப் போல் நான்கு கரங்களுடன் இல்லாமல், இரண்டு திருக்கரங்களுடனேயே காட்சி தருகிறார். வலது கரம் அபய முத்திரை காட்டியும், இடது கரம் வரதமுத்திரை காட்டியும் உள்ளது.
Read more: ஆமை மோதிரம் நல்லது தான்.. ஆனால் இந்த ராசிக்காரர்கள் அணிந்தால் ரொம்ப கெட்டது..!!