கேமராவுடன் கூடிய ஸ்மார்ட் வாட்ச்!… விரைவில் அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டம்!

கேமராவுடன் கூடிய ஸ்மார்ட் வாட்ச்-ஐ விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.


அமெரிக்க நிறுவனமான ஆப்பிள், தயாரிக்கும் கணினி, ஐபேடு மற்றும் ஐபோன், வாட்ச் உள்ளிட்டவைகளுக்கு பயனாளர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இது மட்டுமல்லாமல் வாட்சில் கேமராவை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான காப்புரிமை விண்ணப்பம் கடந்த 2019ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஆப்பிள் வாட்ச் ஆனது கடிகாரத்தை பட்டையில் இருந்து பிரிப்பதற்கு எளிய மற்றும் வசதியான முறையை உருவாக்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இந்த ஆப்பிள் வாட்ச் மணிக்கட்டுக்கு அப்பால் பயன்படுத்துவது போன்ற வடிவமைப்பில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

அதன்படி இந்த புதிய ஆப்பிள் வாட்சியில் நீங்கள் கடிகாரத்தை பாப் அப் செய்யலாம். அதன்பிறகு கேமரா பகுதியை உயர்த்தி படம் பிடித்து கொள்ளலாம். தற்போது ஆப்பிள் நிறுவனம் இந்த புதிய ஸ்மார்ட் வாட்சிற்கான வடிவமைப்பு மற்றும் மென்பொருளுக்கான காப்புரிமையை பெற்றுள்ளது. அதன்படி கேமராவை உள்ளடக்கிய புதிய ஸ்மார்ட் வாட்ச் விரைவில் அறிமுகமாக உள்ளது.

KOKILA

Next Post

திடீர் அதிர்ச்சி...! பிரபல பாலிவுட் நடிகர் நுரையீரல் பாதிப்பால் காலமானார்...! சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்...!

Wed Feb 15 , 2023
பிரபல பாலிவுட் நடிகர் ஜாவேத் கான் உடல்நலக்குறைவால் காலமானார். பிரபல பாலிவுட் நடிகர் ஜாவேத் கான் அம்ரோஹி நுரையீரல் செயலிழப்பு காரணமாக தனது 60 வயதில் காலமானார். மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த ஒரு வருடமாக படுத்த படுக்கையாக இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று உடல்நிலை மோசமானதை அடுத்து ஜாவேத் கான் சாண்டாக்ரூஸில் உள்ள சூர்யா நர்சிங் ஹோமில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவிற்கு […]
images 2023 02 15T050957.430

You May Like