வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் மற்றும் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு மனைவிகளை கணவன்கள் ஒப்படைக்கும் பழங்குடி வழக்கம் குறித்து பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
உலகம் தோன்றியது முதல் தற்போது வரை பல்வேறு பரிணாம வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஆனால் உலகின் இன்னும் சில பகுதிகளில், கற்கால மனிதர்களைப் போலவே பழக்கவழக்கங்களை பின்பற்றும் பழங்குடியினர்கள் இருக்கிறார்கள். நமீபியாவில் (Namibia) வாழும் ஹிம்பா (Himba) பழங்குடி மக்கள் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. சுமார் 50,000 பேர் உள்ள இந்த சமுதாயம், உலகம் எவ்வளவு முன்னேறினாலும், தங்களது மரபுகளை மாறாமல் பாதுகாத்து வருகின்றனர். ஆனால், இந்த பழக்கவழக்கங்கள் பலருக்கு அதிர்ச்சியும், வியப்பும் அளிக்கக்கூடியவை.
இந்த பழங்குடியினரில் குளிப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.. இவர்கள் தண்ணீரில் குளிப்பதற்குப் பதிலாக, புகைப் போட்டுக் குளிப்பார்கள். இது புகை குளியல் என்று அழைக்கப்படுகிறது. பழங்குடி மக்களைப் போலவே, உணவைத் தேடி தங்கள் நாள் முழுவதும் செலவிடுகிறார்கள். இது தவிர, இந்த பழங்குடியினர் ஒரு விசித்திரமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர்.
அதாவது இந்தப் பழங்குடியினரில், வெளியூர்களில் இருந்து வரும் விருந்தினர்களுக்கு உணவுடன் வீட்டு பெண்களும் சேர்ந்து பரிமாறப்படுகிறது. இவர்கள் உணவு தேடுவதற்கே தங்களின் நேரத்தை செலவிடுகிறார்கள். வீட்டிற்கு வருபவர்களுக்கு மனைவிகளை விருந்தளிப்பதற்காகவே அவர்களின் வீட்டில் தனி அறை ஒதுக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகின்றது.
இது “wife sharing tradition” என அழைக்கப்படுகிறது. இந்த நடைமுறை விருந்தோம்பல் மரபாக கருதப்படுகிறது. ஒரு விருந்தாளி வீட்டுக்கு வந்தால், அந்த வீட்டின் கணவன் அவனுக்கு தன் மனைவியை இரவு விருந்தளிப்பதால், உறவு நெருக்கமாகுமாம். இந்தச் சூழ்நிலையில், அந்தக் கணவன் அவ்வீட்டின் வேறு இடத்தில் உறங்க வேண்டிய கட்டாயமும் உண்டு. இது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்ளப்படும் மரபாகவே கருதப்படுகிறது.
இது அந்த கிராமம் குறித்து எடுக்கப்பட்ட ஒரு டாக்குமெண்டரியில் வெளியான தகவல் அடிப்படையில் கூறப்படுவதாகவும், சொல்லப்படுகிறது. இவர்களின் பழக்கவழக்கங்களைப் பார்த்து பலரும் விலங்குகள் என்று வர்ணிக்கின்றனர். ஆனால் இந்த பழங்குடியினர் தங்கள் மரபுகளை பாதுகாத்து வருகிறார்கள்.
Read more: ஆண்களை அச்சுறுத்தும் புரோஸ்டேட் புற்றுநோய்.. வராமல் தடுக்க இந்த உணவுகளுக்கு ‘நோ’ சொல்லுங்க..!!