தர்காவுக்குள் திடீரென கேட்ட அலறல் சத்தம்..!! ஓடிச்சென்ற அக்கம்பக்கத்தினர்..!! ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்..!!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இம்ரான் கான் (34). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் சஜிதா பேகம் (25) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில் இம்ரான்கானுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், கடந்த சில நாட்களாக தாய் வீட்டில் மனைவி சஜிதா பேகம் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மனைவி வீட்டுக்கு சென்ற இம்ரான்கான் மனைவியுடன் பேசி ஒற்றுமையாக இருக்கலாம் எனக்கூறி அவரை வெளியே அழைத்து வந்துள்ளார்.


பின்னர் இம்ரான்கான் தனது இருசக்கர வாகனத்தில் மனைவியை அழைத்துக் கொண்டு டவுண் பகுதியில் இருந்து பேட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ள குளத்தங்கரை முகைதீன் மீரா சாகிபு தர்காவுக்கு வந்துள்ளார். அங்கு இருவரும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி சஜிதா பேகத்தை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து சாதாரணமாக வெளியே வந்து தனது பைக்கில் தப்பிச் சென்றார்.

தர்காவில் அலறல் சத்தம் கேட்டு எதிர் கடையில் இருந்த சிலர் அவரை புகைப்படம் எடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பேட்டை போலீசாருக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தோடு ரத்த வெள்ளத்தில் இருந்த சஜிதா பேகத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பவும் முயற்சி எடுத்தனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பேட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பைக்கில் தப்பிச் சென்ற கணவன் இம்ரான்கான் நெல்லை டவுண் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். எதற்காக மனைவியை கொலை செய்தார் என்ன காரணம் என்பது குறித்து தீவிர விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

CHELLA

Next Post

வெளிநாடு சுற்றுப்பயணம் செல்வதற்கான முக்கிய காரணம் என்ன….? முதலமைச்சர் வெளியிட்ட விளக்கம் இதுதான்…..!

Tue May 23 , 2023
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 9 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றார் முன்னதாக சென்னை விமான நிலையத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 வருடங்களில் 2 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக […]
CM STALIN

You May Like