நள்ளிரவு 2 மணிக்கு மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து! 2 பேர் பலி! பலர் படு காயம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இரண்டு பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் துயர சம்பவம் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் நடைபெற்றிருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மூன்று மாடி கட்டிடம் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது. இந்த விபத்தை தொடர்ந்து அப்பகுதிக்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் வந்து மீட்பு பணிகளில் விரைவாக ஈடுபட்டனர்.


இந்த விபத்தில் அஞ்சலி மற்றும் துர்கா பிரசாத் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் பலத்த காயமடைந்துள்ளனர். தீயணைப்பு படையினரும் காவல்துறையினரும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

1newsnationuser5

Next Post

மக்களே இது புது மோசடி..!! Youtube-இல் இந்த லிங்கை கிளிக் செய்தால் பணம் பறிபோகும்..!!

Thu Mar 23 , 2023
தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், சைபர் மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க சைபர் கிரைம் நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வுகளை மக்களுக்கு ஏற்படுத்தினாலும், ஒரு சில நேரங்களில் அறியாமை காரணமாகவும், அலட்சியம் காரணமாகவும், சைபர் கிரைம் மோசடிகளுக்கு நாமும் உள்ளாகிவிடுகிறோம். அந்தவகையில், யூடியூப் (Youtube) வீடியோ பார்த்தால் உங்களது வங்கிக்கணக்கு ஹேக் செய்யப்படும் என்று சொன்னால் நம்புவீர்களா? தற்போது அப்படிதான் நடந்துகொண்டிருக்கிறது. […]
best vpn for youtube thumb800

You May Like