ஈரோடு மாவட்டத்தில் இருக்கின்ற கவுந்தம் குமாரபுரத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் செல்வகுமாரி. இந்த தம்பதிகளின் மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த தாய் செல்வகுமாரி தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து செல்வகுமாரியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.