அம்மனுக்கு பீசா, பர்கர் படைத்து வழிபடும் வித்தியாசமான வழிபாட்டு முறை கொண்ட கோவில் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மன் கோயில் என்றால் வழக்கமாக மாவிளக்கு, பொங்கல், பழங்கள், விரத உணவுகள் போன்றவை நைவேத்யமாக படைக்கப்படும். ஆனால் சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்பூரில் உள்ள ஒரு கோயிலில் அம்மனுக்கு பீசா, பர்கர், பாஸ்தா, சமோசா உள்ளிட்ட மேற்கத்திய உணவுகளை நைவேத்யமாக வைத்து வழிபடுகின்றனர்.
இது சற்றே ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் இது உண்மையிலேயே நடைபெறும் விஷயம். தூமாவதி அம்மன் கோயில் எனப்படும் இந்த ஸ்தலம், தசமஹாவித்யா என்றழைக்கப்படும் 10 சக்தி வடிவங்களில் ஏழாவது சக்தியான தூமாவதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இங்கு அம்மன் ஒரு வினோதக் காட்சியில், புகை வெளியேறும் நெருப்புக்குள் அமர்ந்தபடி காட்சியளிக்கிறார். இதனால் தான் “தூமாவதி” என அழைக்கப்படுகிறார்.
இக்கோயிலில் மிளகாய் பஜ்ஜி, கச்சோரி, பருப்பு வடை, பாஸ்தா, பீசா, பர்கர் உள்ளிட்ட உப்பான உணவுகள் மட்டும் தான் நைவேத்யமாக படைக்கப்படும். இந்தப் பகுதி மக்கள் கூற்றுப்படி, தூமாவதி அம்மனுக்கு இனிப்பு உணவுகளை விட கார உணவுகள் தான் விருப்பம்.
நவராத்திரி போன்ற முக்கிய நாட்களில், ஒவ்வொரு நாளும் வித்தியாசமான அலங்காரம், வஸ்திரம், உணவுகளுடன் வழிபாடுகள் நடைபெறுகின்றன. சில பக்தர்கள், தங்கள் கனவில் கூட அம்மன் வந்து “பீசா, பர்கர்” போன்ற உணவுகளை நைவேத்யமாக படைக்க வேண்டும் என்று சொன்னதாக பகிர்ந்து கொள்கிறார்கள். இந்தக் கோயிலின் இந்த வித்தியாசமான வழிபாடும், தூமாவதி அம்மனின் அருமையான அமைப்பும், பக்தர்களிடையே பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more: Vastu Tips: சூரியன் அஸ்தமனத்துக்குப் பிறகு இதை செய்யாதீங்க.. குடும்பத்தில் கஷ்டம் மற்றும் இழப்பு நேரிடலாம்..!!