அடிக்கடி வீட்டை விட்டு ஓடிப்போன கணவரை இழந்த பெண்..!! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..!! கடைசியில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!

Sex 2025 7

உத்தப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில், திருமணமாகி 3 ஆண்டுகளாக கள்ளக்காதலனுடன் உறவில் இருந்த பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உயிரிழந்தவர் நீலம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருக்கும் ரவி என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காதல் உறவு நீடித்து வந்துள்ளது. நீலம் அடிக்கடி தனது காதலன் ரவியுடன் தங்குவதற்காக வீட்டை விட்டு வெளியேறி வந்துள்ளார். இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்பு நீலம் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

நீலம் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்து கிடந்ததால், அவரது காதலன் ரவிதான் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டதாக நீலத்தின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். நீலத்தின் மைத்துனர் தர்மேந்திர குமார், காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், “என் மைத்துனி விஷம் குடித்துவிட்டார். ரவிதான் என் மைத்துனியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், போலீசார் வருவதற்கு முன்பே அவர் உடலை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டார்” என்று கூறியுள்ளார்.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீலத்தின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நீலத்தின் மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பதை கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : ஆதாரில் மொபைல் நம்பரை மாற்ற வேண்டுமா..? புது ரூல்ஸ் வந்தாச்சு..!! ரூ.75 கட்டணம் செலுத்தணும்..!!

CHELLA

Next Post

இன்று முதல் அமலுக்கு வந்த வட்டி விகித மாற்றங்கள்..!! RBI போட்ட அதிரடி உத்தரவு..!!

Mon Dec 15 , 2025
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ ரேட் (வட்டி விகிதம்) குறைப்பைத் தொடர்ந்து, நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) ஆகியவை தங்கள் கடன் வட்டி விகிதங்களை உடனடியாக குறைத்து அறிவித்துள்ளன. இந்த விகித குறைப்புகள் இன்று (டிசம்பர் 15) முதல் அமலுக்கு வருவதால், புதிய மற்றும் ஏற்கனவே கடன் வாங்கியவர்களின் மாதாந்திரத் தவணைகள் (EMIs) குறைந்து, கடன்கள் […]
RBI 2025

You May Like