வேலைக்கான நேர்காணலுக்கு சென்ற பெண்ணை, மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பொறியல் பட்டதாரி பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் வேலை தேடி வந்துள்ளார். அப்போது வேலை தொடர்பாக துஷார் சர்மா என்பவரின் தொடர்பு அவருக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில், செல்போனில் பேசிய அந்த பெண்ணை சஹாரா வணிக வளாகத்திற்கு நேர்காணலுக்கு வருமாறு துஷார் சர்மா அழைத்துள்ளார். அப்பெண்ணும் வேலைக்கு தேவையான ஆவணங்களுடன் துஷார் சர்மாவை சந்திக்க சென்றார். அப்போது வணிக வளாகத்தின் வெளியே நின்று கொண்டிருந்த சர்மா, அப்பெண்ணை கார் பார்க்கிங் இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். பிறகு பானம் ஒன்றை பெண்ணுக்கு வழங்கினார்.
அதை குடித்த சிறிது நேரத்திலேயே அந்த பெண் மயங்கி விழுந்துள்ளார். பிறகு அங்கிருந்த காருக்குள் வைத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் கார் பார்க்கிங்கில் பெண்ணை தனியாக விட்டுவிட்டு துஷார் சர்மா காரில் தப்பிச் சென்றார். இதனையடுத்து, தான் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்த அந்தப் பெண் உடனே காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.