இளம்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு ஓட்டம் பிடித்த வடமாநில இளைஞர்.!! ஓராண்டுக்கு பின் சிக்கியது எப்படி..?

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த நொச்சியம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகள் சினேகா (22). இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பழமுதிர் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே கடையில் பணிபுரிந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் காதர் அலி (22) சினேகாவை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், காதர் அலி சினேகாவிடம் ஆசைவார்த்தை கூறி பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டுள்ளார். இதில் கர்ப்பமான சினேகா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். இதனால் காதர் அலி சினேகாவிடம் தெரிவிக்காமல் அசாம் மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு தப்பிச் சென்றுள்ளார்.


இதனால், மனமுடைந்த சினேகா மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக காதர் அலி ஏமாற்றி கர்ப்பமாக்கி விட்டார் என புகார் அளித்துள்ளார். அதன்பேரில், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் அருண்குமார் தலைமையில் தனிப்படையினர் அலியை தேடி வந்தனர். இந்நிலையில், ஓராண்டுக்கு பின் அவர் சொந்த கிராமத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மண்ணச்சநல்லூர் போலீசார், அசாம் மாநிலத்திற்கு சென்று காதர் அலியை கைது செய்து மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

CHELLA

Next Post

சிறுமிகளுக்கு சிறையிலும் தொடரும் பாலியல் கொடுமை! மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை சமர்ப்பிப்பு!

Sat Mar 18 , 2023
ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் பல்வேறு விதமான கொடுமைகள் நடத்தப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு புகார் தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டின் தலைநகரான தெஃரானில் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிஜாப் ஒழுங்கான முறையில் அணியவில்லை என்று கூறி மாஷா அமினி என்ற 22 வயது இளம் பெண் ஈரானில் செயல்பட்டு வந்த மத அறநெறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அந்தக் காவலர்கள் தாக்கியதில் […]
IMG 20230318 WA0084

You May Like