ஆதார் அட்டை..!! ஜூன் 14ஆம் தேதி வரை இலவசம்..!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! வெளியான அறிவிப்பு..!!

நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதே மிக முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே கிடைக்காது என்ற நிலை தற்போது வந்துவிட்டது. ஆதார் என்பது பணம் தொடர்பான ஒரு ஆவணமாகவும் தற்போது உள்ளது. வங்கிகளிலும் ஆதார் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, ஆதார் கார்டில் உங்களின் தனிநபர் விவரங்களை அப்டேட் ஆக எப்போதும் வைத்திருக்க வேண்டும்.


இந்நிலையில், ஆதார் தகவல்களை இணையதளம் மூலம் கட்டணம் இன்றி புதுப்பிக்கலாம் என்று தனித்துவ அடையாள அட்டை ஆணையம் அறிவித்துள்ளது. ஆதார் அட்டையில் பெயர் திருத்தம், வயது மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு இதுவரை ரூ.25 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், ஜூன் 14ஆம் தேதி வரை கட்டணம் இன்றி புதுப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதே சமயம் ஆதார் சேவை மையங்களில் மேற்கொள்ளப்படும் சேவைகளுக்கு வழக்கத்தில் உள்ள கட்டணமான ரூ.50 செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

CHELLA

Next Post

#Breaking: நியூசிலாந்தில் நிலநடுக்கம்...! சுனாமி எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்..‌.!

Thu Mar 16 , 2023
நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் இன்று 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அந்நாட்டு […]
AA18GKOm

You May Like