இனி பால் வாங்குவதற்கும் ஆதார் அட்டை கட்டாயம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

ஆதார் அட்டை என்பது இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தின் 12 இலக்க எண்களைக் கொண்டது. அதில் சம்பந்தப்பட்ட நபரின் பெயருடன், அவரது டெமோகிராபி (பெயர், புகைப்படம், பால், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி), பயோமெட்ரிக் (கைரேகை, கருவிழி உடற்கூறு) விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்த அட்டை ஒருவரது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். இந்த அட்டையைப் பெறுவதற்கு ஒருவர் தனது சாதி, மதம் அல்லது மொழியைத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. ஆதார் எண் சமையல் எரிவாயுவுக்கான மானியம் பெறுவது உள்ளிட்ட அரசின் பல்வேறு மானியங்கள் மற்றும் நலத்திட்டங்கள்/சேவைகளைப் பெற உதவுகிறது. 


இந்நிலையில், மாதந்தோறும் பணம் செலுத்தி அட்டை மூலம் ஆவினில் பால் பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் ஆதார் எண்களை இணைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும் இதனால், அட்டைகள் மூலம் பால் வாங்கும் படி அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆவின் வாடிக்கையாளர் என்ற அடையாளத்திற்காக மட்டுமே ஆதார் எண் சேர்க்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு..!! ஹால்டிக்கெட் வெளியீடு..!! எப்படி பதிவிறக்கம் செய்வது..?

Fri Mar 3 , 2023
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் நிதியாளர் பதவிகளுக்கான 5 காலிப்பணியிடங்களுக்கு 11.11.2022இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 10ஆம் தேதி வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்த தேர்வானது மார்ச் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், கணினி வழி தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது. www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக […]
WhatsApp Image 2023 01 08 at 8.58.40 PM

You May Like