மின் இணைப்புடன் ஆதார்..!! புதிய இணையதள முகவரி வெளியீடு..!! மின்சார வாரியம் அறிவிப்பு..!!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க புதிய இணையதள முகவரியை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது மத்திய அரசின் உரிய ஒப்புதல் பெற்று தமிழகமெங்கும் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம்கள், டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தமிழக மின்சாரத் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் காலை 10.30 முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும். பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் தவிர ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

மின் இணைப்புடன் ஆதார்..!! புதிய இணையதள முகவரி வெளியீடு..!! மின்சார வாரியம் அறிவிப்பு..!!

இந்நிலையில், இந்த பணிக்காக மின்சார வாரியம் கூடுதலாக தனி இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆதார் எண்ணை இணைக்க மட்டும் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம். இதுதவிர, www.tangedco.gov.in என்ற இணையதளத்திலும்  இணைக்கலாம்.

CHELLA

Next Post

8-10ஆண்டுகள் ஆன ஆதாரை புதுப்பிக்க சிறப்பு முகாம் - தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தகவல்...

Sun Dec 4 , 2022
நாட்டில் ஆதார் அட்டை என்பது ஒவ்வொருவருக்கும் மிக முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கிக் கணக்கு வரை அனைத்திற்கும் பயன்படுகிறது. அதுமட்டுமின்றி, வங்கியில் கடன் வாங்குவதற்கு கூட ஆதார் அட்டை தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது. இதன்படி ஆதார் அடையாள அட்டைதாரர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை […]
ஆதாரில் இப்படி ஒரு வசதி இருக்கா..? இனி ஈஸியா வேலை முடிஞ்சிரும்..!! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

You May Like