மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க புதிய இணையதள முகவரியை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது மத்திய அரசின் உரிய ஒப்புதல் பெற்று தமிழகமெங்கும் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம்கள், டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தமிழக மின்சாரத் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் காலை 10.30 முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும். பண்டிகை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் தவிர ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்த பணிக்காக மின்சார வாரியம் கூடுதலாக தனி இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆதார் எண்ணை இணைக்க மட்டும் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம். இதுதவிர, www.tangedco.gov.in என்ற இணையதளத்திலும் இணைக்கலாம்.