பொதுமக்கள் கவனத்திற்கு…! வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க நாளை சிறப்பு முகாம்…!

இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ ஆணையின்படி வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது கடந்த 01.08.2022 முதல்‌ தொடங்கி நாளது வரை நடைடுபற்று வருகிறது. இந்நிலையில்‌, வாக்காளர்கள்‌ எவரேனும்‌ தங்களது அதார்‌ விவரங்களை வாக்காளர்‌ பட்டியலுடன்‌ நாளது வரை இணைக்காமல்‌ இருந்தால், அவ்வாக்காளர்களுக்காக வருகின்ற 19.03.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சிறப்பு முகாம்‌ மாவட்டம்‌ முழுவதும்‌ நடைபெற உள்ளது.


எனவே மேற்காணும்‌ சிறப்பு முகாமில்‌ பொதுமக்கள்‌ தாமாக முன்வந்து தங்களுக்கு அருகாமையில்‌ உள்ள வாக்குசாவடி நிலையங்களில்‌ தங்களுடைய ஆதார்‌ மற்றும்‌ வாக்காளர்‌ பதிவு எண்‌ விவரங்களை படிவம்‌ 6B -யில்‌ பூர்த்தி செய்து வாக்குசாவடி நிலைய அலுவலரிடம்‌ ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்‌.

Vignesh

Next Post

அடிதூள்...! விதவைகளுக்கு இனி மாதம் தோறும் ரூ.3,000 வழங்கப்படும்...! முதல்வர் அசத்தல் அறிவிப்பு...!

Sat Mar 18 , 2023
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்ட அறிவிப்பில், யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் விதவைகளுக்கான நிதியுதவி ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்டார். இதேவேளை, விதவைகளுக்கான உதவித்தொகை 2000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் புதிய தொழிற்சாலைகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். முன்னதாக புதுச்சேரியில் […]
women bank account 1602765091

You May Like