கூலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாடி ஷேமிங் செய்யும் வகையில் பேசிய ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள கூலி படம் வரும் 14-ம் தேதி வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இந்த படத்தில் நாகார்ஜூனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் ஷாஹிர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.. மேலும் பாலிவுட் உச்சநடிகர் ஆமிர் கானும் இந்த படத்தில் கேமியொ ரோலில் நடிக்கிறார்.. கூலி படத்தின் ட்ரெயலர், பாடல்கள் ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.. இந்த நிலையில் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை சன் டிவி ஒளிபரப்பட்டது.. அதில் கூலிப் படக்குழுவினர் பங்கேற்று படத்தில் தங்கள் அனுபவங்கள் குறித்து பேசினர்..
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது கூலி படம் உருவானது குறித்தும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கூலி படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் குறித்தும் பேசினார்.. இந்த விழாவில் ரஜினி சுமார் 40 நிமிட உரை நிகழ்த்தினார். ரஜினி பேசிய போது, சௌபின் ஷாஹிர் மற்றும் அமீர் கான் ஆகியோரை பாடி ஷேமிங் செய்யும் வகையில் வகையில் பேசியதற்காக கடும் விமர்சனங்களை எதிர்கொள்கிறார். சௌபினை ‘வழுக்கை’ என்றும், ஆமிர் கானை ‘குள்ளமானவர்’ என்றும் தெரிவித்தார்.. ஆனால் அதே நேரம் சௌபின், ஆமீர் கானின் சிறந்த நடிப்பைப் பாராட்டினார்.
சௌபினின் நடிப்பு குறித்து ஆரம்பத்தில் தனக்கு சந்தேகம் இருந்ததாகவும், நடிகரின் பணி குறித்து தனக்குத் தெரியாது என்றும் கூறினார். மேலும் “லோகேஷிடம், ‘சௌபின் யார்? அவர் எந்தப் படங்களில் நடித்துள்ளார்?’ என்று கேட்டேன்” என்று கூறினார்.
‘மஞ்சுமல் பாய்ஸ்’ பற்றி குறிப்பிட்டார், அதில் சௌபின் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார்.
“எனக்கு இன்னும் சந்தேகங்கள் இருந்தன, அவர் வழுக்கையாக இருந்ததால் அவர் அந்த வேடத்திற்குப் பொருந்துவாரா என்று கூட நினைத்தேன். ஆனால் லோகேஷுக்கு அவர் மீது முழு நம்பிக்கை இருந்ததால் நான் அமைதியாக இருந்தேன்.
“மூன்றாவது நாள் படப்பிடிப்பில் நான் சேர வேண்டும் என்று லோகேஷ் என்னிடம் கூறினார். முதல் இரண்டு காட்சிகளில் சௌபினின் காட்சிகளை படமாக்குவதில் அவர் மும்முரமாக இருந்தார். நான் இறுதியாக வந்தபோது, சௌபினின் நடித்த காட்சிகளை எனக்குக் காட்டினார், அவரின் நடிப்பை பார்த்த உடன் மிரண்டு விட்டேன்.. என்ன ஒரு நடிகர்! வாழ்த்துக்கள்!” என்று குறிப்பிட்டார்..
‘கூலி’ படத்தில் ஆமிர் கானின் சிறப்புத் தோற்றம் பற்றிய செய்தியை லோகேஷ் எவ்வாறு வெளியிட்டார் என்பது பற்றி அவர் பேசினார். தனக்கு இன்னொரு சிறப்புத் தோற்றம் இருப்பதாகக் குறிப்பிட்டபோது, அது கமல்ஹாசனாக இருக்கலாம் என்று ரஜினிகாந்த் நினைத்து தனது கற்பனைகளை பறக்கவிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “லோகேஷ் அது ஆமிர் கான் என்று கூறினார். நான் அமைதியாகிவிட்டேன். பிறகு, நான் அவரிடம் ஆமிர் இந்த வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாரா என்று கேட்டேன். ஒரு ஸ்கிரிப்டை ஓ.கே சொல்லவே ஆமிர் கான் 2 ஆண்டுகள் எடுப்பார் என்று நினைத்தேன். அவர் ஒரு படம் எடுக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்? அப்படிப்பட்ட ஒரு Perfectionist. இங்கு எப்படி கமல்ஹாசனோ அதே போல் வட இந்தியாவில் ஆமிர்கான்.. ஒரு பக்கம் சல்மான் கான், மறுபுறம் ஷாருக்கான். குள்ளமாக இருந்தாலும் அவர் அனைவரிடையேயும் உயர்ந்து நிற்கிறார். என்ன ஒரு லெஜெண்ட்! ஒரு லெஜெண்ட்! சல்யூட்.. சார்” என்று தெரிவித்தார்..
ரஜினிகாந்தின் நோக்கம் ஆமிர் கான் மற்றும் சௌபின் ஷாஹிரைப் புகழ்வதாக இருந்தாலும், பல இணைய பயனர்கள் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் குறித்து கோபமடைந்தனர்..

ஒரு பயனர் , “இது போன்ற வார்த்தைகள் சிரஞ்சீவி அல்லது பாலய்யா அல்லது மோகன்லால் அல்லது அமிதாப் பச்சன் போன்றவர்களிடமிருந்து வந்திருந்தால், இந்த மக்கள் கேள்வி கேட்காமல் விட்டுவிடுவார்களா?”

மேலு ஸ்ருதிஹாசனை கிளாமர் கேர்ள் என்று ரஜினி கூறியதற்கும் பலர் விமர்சித்து வருகின்றனர்.. ஐஸ்வர்யா அல்லது சௌந்தர்யா ரஜினிகாந்தை யாராவது இப்படி அழைத்தால் அது ஓ.கேவா? என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பி உள்ளார்.. இதுவரை பேசியதிலேயே அவர் கூலி ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியது தான் மோசமான பேச்சு என்று கூறியிருந்தார்..
