பெருமாளுக்கு எண்ணெய்யில் அபிஷேகம்.. அருமருந்து..!! இதன் சிறப்பு என்ன தெரியுமா..? சனிக்கிழமை இந்த கோயிலுக்கு போங்க..!!

Perumal 2025

தென் தமிழகத்தின் மிக முக்கியமான புனித தலமாகவும், 108 திவ்ய தேசங்களில் 48-வது தலமாகவும் விளங்குவது நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அமைந்துள்ள வானமாமலை பெருமாள் திருக்கோவில் ஆகும். ‘ஸ்ரீவரமங்கை நகர்’, ‘தோத்தாத்ரி சேத்திரம்’ மற்றும் ‘நாகணை சேரி’ எனப் பல பெயர்களால் அறியப்படும் இக்கோவிலின் முதன்மை தெய்வம் வானமாமலை தோத்தாத்திரி நாதர் ஆவார்.


உற்சவர் தெய்வநாயகப் பெருமாள். பழம்பெரும் புராணங்களான பிரம்மாண்டம், ஸ்கந்தம், நரசிம்மம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தத் தலம், திருமால் சுயமாக வெளிப்பட்ட அஷ்ட சுயம்புத் தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இக்கோவிலின் மிகப் பெரிய தனிச்சிறப்பு, தினமும் நடைபெறும் தைல அபிஷேகம் ஆகும்.

பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படும் நல்லெண்ணெய், பால், தயிர் அபிஷேகங்களுக்கு பிறகு, அந்த அபிஷேக தைலங்கள் அனைத்தும் கோவிலில் உள்ள ‘நாழிக்கிணற்றில்’ (தைலக்கிணறு) ஊற்றப்படுகின்றன. சுமார் 25 அடி நீளமும் 15 அடி அகலமும் கொண்ட இந்த கிணற்றில் உள்ள எண்ணெயை சிறிதளவு நம்பிக்கையுடன் அருந்தினால், நீண்டகால நோய்களும், குறிப்பாக தோல் வியாதிகளும் குணமாகும் என்ற பல நூற்றாண்டு பழமையான நம்பிக்கை இன்றும் நிலவி வருகிறது.

புரட்டாசி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் சிறப்பு தைல அபிஷேகம் நடத்தப்படும்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு திரண்டுவந்து வழிபடுவது வழக்கம். புராணக் கதைகளின்படி, பிள்ளை பாக்கியம் வேண்டி திருக்குறுங்குடி நம்பிராயரிடம் திருநகரி மன்னன் காரி வேண்டியபோது, கனவில் தோன்றிய பெருமாள் மன்னனின் விருப்பப்படி அவனுக்காகவே இத்தலத்தில் சுயமாகத் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இந்த வானமாமலைப் பெருமாளின் அருளால் மன்னனுக்கு மகனாகப் பிறந்தவர் தான் நம்மாழ்வார் என்பது வரலாறு.

கோவில் கருவறையில் வானமாமலை பெருமாள், ஆதிசேடனின் நாகணை மீது வைகுண்ட பதி கோலத்தில் அமர்ந்திருக்க, ஸ்ரீதேவி, பூதேவி, நீலாதேவி தாயார்கள் அருகில் நிற்கின்றனர். தை அமாவாசை, பங்குனி, சித்திரை, ஆவணி, ஐப்பசி பவுர்ணமி ஆகிய நாட்களில் கருட சேவை இங்கு பெரும் கோலாகலமாக நடைபெறும். தை அமாவாசை அன்று நடைபெறும் எண்ணெய் காப்பு வழிபாடு மிகுந்த சடங்குடன் நடத்தப்படுகிறது. மேலும் உடல்நலம், மன அமைதி, கல்வி முன்னேற்றம், குடும்ப மகிழ்ச்சி ஆகியவற்றை பெற பக்தர்கள் நம்பிக்கையுடன் வானமாமலை பெருமாளை வழிபட்டு செல்கின்றனர்.

Read More : காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில்.. நான்கு திவ்ய தேசங்கள் ஒரே இடத்தில் அமைந்த அதிசய தலம்..!

CHELLA

Next Post

புதன்கிழமை இப்படி விநாயகப் பெருமானை வழிபட்டால், பல மடங்கு பலன்கள் கிடைக்கும்!.

Wed Oct 8 , 2025
புதன்கிழமை விநாயகரை வழிபடுவதன் மூலம் பலன்களைப் பெறுவீர்கள். இந்த நாள் புதன் கிரகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இது ஞானம், தொடர்பு மற்றும் வணிகத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஜோதிடத்தின் படி, இது விநாயகர் தினம், லால் கிதாபின் படி, இது துர்கா தேவியின் நாள். பலவீனமான நினைவாற்றல் அல்லது நிலையற்ற மனம் கொண்டவர்கள் இந்த நாளில் விரதம் இருப்பதன் மூலம் சிறப்பு நன்மைகளைப் பெறுகிறார்கள். இந்த நாளில் விநாயகர் கோவிலுக்குச் சென்று வெல்லம் […]
ganesh chaturthi first day 11zon

You May Like