100% நேரடிப்பயன் பரிமாற்றக் கணக்கை ஆதாருடன் இணைப்பதை அடைய மாநிலங்கள் முகாம்களை ஏற்பாடு செய்து பயனாளிகளோடு தொடர்பில் இருக்க வேண்டும்.பணிக்கு வரும் பயனாளியிடம் ஆதார் எண்ணை வழங்குமாறு கேட்க வேண்டும் என்றாலும் அதன் அடிப்படையில் பணி மறுக்கப்பட மாட்டாது.தொழிலாளி எபிபிஎஸ்க்கு தகுதியற்றவர் என்ற காரணத்தின் அடிப்படையில் வேலை அட்டைகளை நீக்க முடியாது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் திட்டம், ஆதார் வாயிலாக இயக்கப்பட்ட கட்டணத்தை ஏற்கவில்லை – ஆதார் அடிப்படையிலான கட்டணப் பரிமாற்ற முறையைத் தேர்வு செய்துள்ளது. திட்டத்தில், ஆதார் புதுப்பிக்கப்பட்டவுடன். தரவுத்தளம், இடம் மாற்றம் அல்லது வங்கி கணக்கு எண்ணில் மாற்றம் காரணமாக பயனாளி கணக்கு எண்களை புதுப்பிக்க வேண்டியதில்லை. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கணக்கு எண்ணுக்குப் பணம் செலுத்தப்படும்.